Wednesday, November 25, 2009

மூட நம்பிக்கையின் சிகரங்கள்!

விலங்கினங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது ஐந்தறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் பகுத்தறிவு என்று கூறப்படுகிறது. ஒரு பொருளை பார்த்தால் விலங்கினங்களால் அது என்ன என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் மனிதனோ அதற்கு சக்தி பெற்றவனாக இருக்கின்றான். உதாரணமாக ஒரு வேப்பமரத்து இலையை கண்களால் காணக்கூடிய மனிதன், அதனுடைய தன்மையை உடனடியாக புரிந்து கொள்கிறான். ஆனால் அதன் அருகில் வந்து முகர்ந்து பார்த்து அல்லது நாவால் சுவைத்து பார்த்து தான் ஒரு ஆடு அதன் தன்மையை புரிந்து கொள்கிறது. இதனால் ஆட்டிற்கு இல்லாத அதிகபட்ச அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனும் முடிவுக்கு மனிதன் வருகிறான். அது தான் பகுத்தறிவு எனப்படுகிறது.

பழைய சோறு குடிக்கும் ஊர்மக்கள்

விலங்குகளை விட மரம் செடி, கொடிகளை விட தனக்கு அதிக பலம் இருக்கிறது எனக் கூறிக்கொள்ளும் மனிதன், தன்னை விட அறிவில், ஆற்றலில் குறைந்த விலங்கினங்களும் மரம், செடி, கொடிகளும் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்யுமென்று நம்புகின்றான். அவைகள் மனிதனது பிற்காலத்தை தெரிந்து வைத்திருப்பதாக நம்புகின்றான். குறிப்பிட்ட ஒரு பொருளால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அது செய்வதாக நம்புவது மூடநம்பிக்கை எனப்படும்.

இந்த மூடநம்பிக்கைக்கு படித்தவன், பாமரன், ஆண், பெண் என் பேதமில்லாமல் பெரும்பாலானோர் அடியையாகி விடுவதை நம்மால் காண முடிகின்றது.

வீடு வீடாக பிச்சை எடுக்கும் மக்கள்

இந்த மூடநம்பிக்கைகள் பல வகைப்பட்டதாக இருந்தாலும் மழை வேண்டி செய்யும் கேலிக் கூத்துகள் தமிழகத்தில் தற்போது மிக அதிகரித்து வருகிறது.

மழையை தருவது இறைவனின் செயல் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் பருவமழை பொய்த்துவிடும் போது எப்படியாவது மழை வந்து விடாதா என மனிதன் துடிக்கின்றான். அதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகின்றான். ஒவ்வாரு இடங்களிலும் மழை வேண்டி நடத்தப்பட்ட கூத்துகள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன.

அரசுக்கும் வேம்புக்கும் திருமணம்

மழை வேண்டி சின்னகவுண்டன் பாளையத்தில், வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய சோறு மற்றும் கஞ்சிகளை பெரிய அண்டாக்களில் ஊற்றி கரைத்து குடித்துவிட்டு வாத்தியங்கள் முழங்க, ஊரின் முக்கிய வீதிகளில் முறம், சீவக்கட்டையுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் ஒப்பாரி வைத்து 'எங்களது ஊரில் மழை பெய்யவில்லை, ஊரை விட்டு வெளியே செல்வதை தடுக்க, மழை பெய்ய வேண்டும் வருண பகவானே!' என்று கூறியபடி ஊரின் எல்லையில் உள்ள மரத்தில் முறம், சீவக்கட்டை, கூடையை கட்டிவிட்டு திரும்பினார். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் எனறு இவர்கள் நம்புகிறார்கள்.

சிவகாசி அருகே ஆனைக்கூட்டம் என்ற இடத்தில் ஊர்மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று பிச்சை எடுத்தார்களாம். அவ்வாறு செய்தால் மழை வருமென்று இவர்கள் நம்புகின்றனர்.

தவளைக்கு கல்யாணம்

இன்னும் சில இடங்களில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். இப்படி ஒரு வழிபாடு நடத்துவதற்காகவே வேம்பு மற்றும் அரச மரத்தை அருகருகே வளர்த்து வருகின்றனர். இவ்விரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வந்து விடும் என்பது ஒரு சில கிராமத்தார்களின் நம்பிக்கை.

தவளைகளுக்கு திருமணம் செய்வதென்பது வருடந்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு கூத்து. இதனால் மழை வரும் என்று நம்புகிறார்கள். ஊர் கூடி, தாரை தப்பட்டை முழங்க வலம் வந்து தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு தம் கைகளில் இருப்பது ஆணும் பெண்ணும் தானா? அல்லது இரண்டும் ஆணா? அல்லது பெண்ணா என்பது கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.

கழுதைக்கு கல்யாணம்

தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதை போலவே சில இடங்களில் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் இரண்டு கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் சில இடங்களில் மனிதனுக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. ஊரார் முன்னிலையில் தாலி கட்டும் அந்த ஆண்மகனுடன் கழுதையை சீர் செனத்தி கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அந்த கழுதையை மன்னிக்கவும்! மணப்பெண்ணை தன்னுடன் அழைத்து செல்லும் மணமகன், அதனுடன் குடும்பம் நடத்துவாரா என்பது அவருக்கே வெளிச்சம்! இத்தகைய அருவருப்பான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் சில இடங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் அமர்ந்து மழைக்காக தங்கள் தங்கள் தெய்வங்களை வழிபட்டு பிரார்த்தனை புரிகின்றனர். இதில் இஸ்லாமியர்களும் அடக்கம்.

மனிதன் கல்வியில் எத்தகைய வளர்ச்சியை கண்டாலும் அவனிடத்தில் இருக்கக்கூடிய மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க முடியவில்லை. மனிதனுக்கு எத்தகைய உதவிகளையும் செய்ய இயலாத குரங்குகள், பாம்புகள் போன்றவற்றை தெய்வமாக வழிபடுகின்றான். ஆனால் அதே பாம்புகளை பிடித்து விற்று பணம் சம்பாதிக்கின்றது இன்னொரு கூட்டம்.

மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் சர்வ மதத்தினர்

ஆந்திர மாநிலம் கரீம் நகரில் உள்ள ஒரு கோவிலில் எமதர்மன் சிலை ஒன்று உள்ளது. தெலுங்கு கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் எமதர்மன் பூமிக்கு இறங்கி வருவதாகவும் அன்றைய நாட்களில் அவரை வழிபட்டால் ஆயுள் நீட்டிப்பு தருவார் என்பதும் மக்களின் (மூட) நம்பிக்கை. இதனால் பல பகுதிகளிலிருந்தும் ஆயுள் விருத்திக்காக பலரும் இங்கு வருகின்றனர். அவ்வாறு மராட்டியத்திலிருந்து ஆயுள் நீட்டிப்பு வழிபாடு நடத்த வந்தவர்கள் மீது லாரி மோதி காரில் இருந்த 8 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அவர்களது நம்பிக்கையின் படி எமதர்மன் பூமிக்கு இறங்கி வரும்போது தான் நடந்துள்ளது. தன்னை வணங்க வந்தவர்களையே எமதர்மன் கொன்றிருக்கிறான். இவ்வாறான சம்பவங்கள் நம் கண்களுக்கு முன்னால் நடந்தும் கூட மூடத்தனத்திலிருந்து விலகமறுப்பவர்களை என்னவென்று சொல்வது?

பாம்புகளை வணங்கும் மக்கள்

மனிதன் அறிவியலில் முன்னேறி சாதனை படைத்துவிட்டான், மிக விரைவில் சந்திரனில் குடியேறிவிடுவான் என கூறிக்கொண்டிருக்கும் நிலையிலும் மூடப்பழக்கங்களை ஒழிக்கமுடியவில்லை.

அறிவை சூனியமாக்கும் மூடநம்பிக்கைகளை மனிதன் கைவிட்டு பகுத்து ஆய்ந்து செயல்படுவானானால் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு புலப்படும். இஸ்லாமியர்கள் இத்தகைய பழக்கங்களில் ஈடுபடுவதில்லை என்பது சற்று நிம்மதி தரும் விஷயமாகும்.

விற்பனைக்காக கடத்தப்பட்ட பாம்புகள்

மழை வேண்டுபவர்கள் இறைத்தூதர் காட்டிய வழியில் மழைத்தொழுகை தொழுதால் இறைவன் நாடினால் மழையை தருவான் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. முஸ்லிம்கள் மழைக்காக அதை மட்டுமே செய்ய வேண்டும்.

ஆக, கழுதை, தவளை, பாம்பு, பல்லிகளை வணங்குவதாலோ கல்யாணம் செய்து வைப்பதாலோ மழை வந்துவிடப் போவதில்லை. தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பழக்கங்கள் இருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் வறட்சி ஏற்படுகின்றன, மழை பெய்கின்றன. ஆனால் அங்கு மூடத்தனங்கள் இல்லை. எனவே பகுத்தறிவு பெற்ற நாம் அறிவார்ந்த செயல்களை செய்வோமே!

நன்றி : உணர்வு

Friday, November 20, 2009

அடையாளங்களை அழித்த அரிதாரம்...!

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்.






Thursday, November 12, 2009

தீவிரவாத இந்து அமைப்பை தடை செய்ய வேண்டும்!

கோவா கிராம பஞ்சாயத்து தீர்மானம்

மார்கோவா, நவ 12-_ சனாதன் சான்ஸ்தா எனும் தீவிரவாத இந்து அமைப்பை தங்கள் கிரா-மத்தில் செயல்பட அனு-மதிக்க கூடாது என்றும் அதனை தடை செய்ய-வேண்டும் என்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பன்டேரா கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சனாதன் சான்ஸ்தா-வின் ஆசிரமம் அமைந்-துள்ள ராம்நத்தியையும் உள்ளடக்கிய இந்த கிரா-மப் பஞ்சாயத்து, மார்-கோவா குண்டு வெடிப்-பைத் தொடர்ந்து, சனா-தன் சான்ஸ்தாவை தடை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் சனாதான் சான்ஸ்தாவின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.


கடந்த அக்டேபர் 16ஆம் தேதி கோவாவின் வணிகத் தலைநகரான மார்கோவாவில் நடை-பெற்ற குண்டு வெடிப்-பில் சனாதன் சான்ஸ்தா உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். காவல்-துறையின் விசாரணை-யில், அந்த இருவரும் வெடிகுண்டை வாகனத்-தில் எடுத்துச் செல்லும்-போது வழியிலேயே குண்டு வெடித்துவிட்ட-தாக அறியப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழ-மையன்று நடைபெற்ற பன்டேரா கிராமப் பஞ்-சாயத்து கூட்டத்தில், சனாதன் சான்ஸ்தாவுக்கு எதிராக கிராம மக்கள் கடும் கோபத்துடன் பேசினர். இதனை அடுத்து சனாதன் சான்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


சனாதன் சான்ஸ்-தாவை தடை செய்வது-டன், ஆசிரமத்தின் நட-வடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்-மானம் நிறைவேற்றப்-பட்டுள்ளதாக பன்டேரா கிராமப் பஞ்சாயத்தின் செயலாளர் திவாகர் சலேகர் கூறியுள்ளார்.

நன்றி : விடுதலை

Monday, November 9, 2009

நடிகைகளுக்கு சேலை கட்டுவோம்!

மகளிர் அமைப்பு எச்சரிக்கை

கடந்த வாரம் சர்வதேச மனித உரிமை அமைப்பின் மகளிர் அணியினர் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சினிமாவில் ஆபாச உடைகளை அணிவதை எதிர்த்தும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை கண்டித்தும் குரலகள் எழுப்பப்பட்டன.

ஆபாச போஸ்டர்களுக்கு தார் பூசும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

ஒரு பக்கம் குடும்பத்தின் குத்துவிளக்காக சொல்லப்படும் பெண்களெல்லாம் சீரியலில் மூழ்கி அழுது வடிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்தியாவின் தூண்களான இளைஞர்களோ, நடிகைகளுக்கு கோவில் கட்டுவதையும் அவர்களின் பிறந்தநாளுக்கு ஆரத்தி எடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

கால்கடுக்க காத்து நின்று அதுவும் ஒரு மாதிரியான படமென்றால் யாரும் பார்த்து விடக் கூடாதே என மறைந்து மறைந்து படம் பார்த்த காலம் போய் இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை நீ பார்த்தே ஆக வேண்டும் என மிரட்டுவது போல் வரவேற்பறையில் வந்து விழுகின்றன நடிகைகளின் ஆபாச காட்சிகள். காந்தி ஜெயந்தி முதல் குடியரசு தினம் வரை நடிகைகளின் சிறப்பு பேட்டிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துவக்க காலங்களில் சினிமா நடிகைகளை விபச்சாரிகளை போல கருதியதால் பெண்கள் நடிக்க செல்வதை அவமானமாகக் கருதினர். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பெயிண்ட் அடித்து தாவணி சுற்றி இளமை தோற்றத்தில் நடிக்க வைத்தனர்.

மனித உரிமை கழகத்தின் மகளிர் பிரிவு சென்னையில் நடத்திய ஆபாசத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

ஆனால் இன்று சினிமா என்பது குறைந்த நேரத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் லாபகரமான தொழில் என்பதாலும் நடிகைகளுக்கு பண முதலீடு எதுவும் தேவையில்லை என்பதாலும் இளம் நடிகைகளும் நடிக்க புறப்பட்டு விட்டனர். அதன் காரணமாக போட்டி ஏற்பட்டு, ஆடைகளை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறார்களோ அந்த அளவுக்கு கிராக்கியும் ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டிய தணிக்கை துறையும் அதை கண்டு கொள்ளாததால் சபலிஸ்டுகளுக்கு கொண்டாட்டமாகி போய்விட்டது. தொலைக்காட்சியில் அரைகுறை ஆடையுடன் வரும் இந்த நடிகையை தந்தை, தாய், மகன், மகள் என அனைவரும் ஒன்றாக இருந்து ரசிப்பது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். தன் மனைவியும் மகளும் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என எண்ணும் ஒருவன் கூட தான் ரசிக்க, ஒழுக்கக் கேடான பெண்கள் வேண்டுமென்றே விரும்புகிறான். இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் மகளிர் அணியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் அவசியமான ஒன்றாகும்.

முஸ்லிம்கள் அணியும் ஃபர்தாவை ஆணாதிக்கம் என்றும் ஆடைக்குறைப்பை பெண் சுதந்திரம் என்றும் கூறும் போலி பெண்ணுரிமை வாதிகளுக்கு மத்தியில் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்பதே காண்போரின் கூற்றாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மனித உரிமை ஆணையத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா அவர்கள், 'சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும்' என்று கடுமையாக சாடினார். நடிகைகளின் ஆபாசம், தனியார் டிவி சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது? என்றும் கல்பனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வரவேற்க தகுந்த விஷயம். ஏனெனில் தன்னுடைய தேவைக்காக திருடக்கூடிய ஒருவன் எத்தகைய தீங்கையும் செய்ய முற்படுவான். அப்படிப்பட்டவனைக் கூட அவன் அகப்பட்டால் தான் அவனை தண்டிக்க முடியும். ஆனால் தணிக்கை துறையின் செயல் அப்படிப்பட்டதல்ல. ஒரு தீமை மக்களுக்கு செல்வதற்கு முன்பாகவே தடுத்திட முடியும். எனவே இது தணிக்கை துறையின் குற்;றமே! பணத்திற்காக எத்தகைய கீழ்த்தரமான கேரக்டர்களிலும் நடிக்க நடிகைகள் தயங்குவதில்லை. ஆனால் அது மக்களை சென்றடைந்து விடாமல் பாதுகாப்பது அதாவது தடுத்து நிறுத்துவது தணிக்கை துறையின் கடமையாகும்.

'கீழ்த்தரமாக, ஆபாசமாக ஆடை அணிந்தும் விரசக்காட்சிகளிலும் நடிக்கும் நடிகைகளுக்கு வெட்கம், மானம் இருந்தால் (அதுவெல்லாம் அவர்களுக்கு உண்டு என கல்பனா நினைக்கிறார் போலும்!) இனி அவ்வாறு நடிக்கக் கூடாது. ஆபாசமாகவே உடையணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம்' என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடக்குமானால் அது தணிக்கை துறைக்குத் தான் அவமானம். அனைத்து மகளிர் அமைப்பினரும் ஒன்றிணைந்து நடிகைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தணிக்கை துறையையும் முற்றுகையிட வேண்டும். மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய எதையும் யாரும் செய்துவிட முடியும் எனில் தணிக்கை துறை என்பது எதற்காக? அனைத்து துறைகளிலும் ஆய்வு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் தணிக்கை துறையை ஆய்வு செய்யவில்லை என்ற கேள்விகள் எழுந்து காலங்கள் பலவாயிற்று. அவ்வாறு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கறுப்பாடுகள் களையப்படும் போதுதான் ஆபாசங்கள் கட்டுக்குள் வரும். சமுதாயமும் சீர் பெறும்.

நன்றி : உணர்வு

Sunday, November 1, 2009

ஹஜ் செய்வோர் கவனிக்க வேண்டியவை!

இந்தியாவிலிருந்து ஹஜ் விமானங்கள் அக்டோபர் 20 முதல் புறப்படுகின்றன. மதீனாவிலும் ஜித்தாவிலும் ஹாஜிகள் வந்திறங்குகின்றனர். ஒரு ஹாஜி சுமார் 40 நாட்கள் இங்கு தங்குகிறார். 8 நாட்கள் மதீனாவிலும் 5 நாட்கள் அரஃபாவிலும் மினாவிலும் மீதி நாட்கள் மக்காவிலும் தங்கி இருப்பார். இந்த புனித பயணமும் தங்கும் நாட்களும் பாதுகாப்புடன் அமைய கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.



1. இந்த வருட ஹஜ், குளிர் கால துவக்கத்தில் துவங்குகின்றது. இத்துவக்கம் சாதாரணமாக ஃபுளூ காய்ச்சல் துவங்கும் நாட்களாகும். இது சவுதி அரேபியாவில் துவங்கி விட்டதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பன்றிக்காய்ச்சலும் அதிகமாக பரவ வாய்ப்புகள் அதிகம். ஆதலால் ஹாஜிகள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆறு முதல் எட்டு மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பழங்களும் பானங்களும் சூடான சூப் மற்றும் வைட்டமின் சி யைத் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது கைக்குட்டை அல்லது டிஸ்ஸூ பேப்பர் மூலம் வாயையும் மூக்கையும் பொத்தவும். கைக்குட்டையை அடிக்கடி கழுவுதல் நலம். கை கொடுத்தல், கட்டித் தழுவுதல் மற்றும் முத்தம் கொடுத்தலை தவிர்க்கவும். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களிலிருந்து விலகி இருக்கவும். வெளியே செல்லும் போது முகமூடி(மாஸ்க்) அணியுங்கள். காய்ச்சலோ தொண்டை வலியோ இருந்தால் அறைக்குள்ளேயே இருந்து மருந்து உட்கொள்ளுங்கள். அது நோய் அதிகமாவதையும் அடுத்தவருக்கு பரவுவதையும் தடுக்கும். காய்ச்சல் அதிகமானாலோ மூன்று நாட்களுக்கு பின்னரும் தொடர்ந்தாலோ உதட்டில் நிற வித்தியாசத்தை கண்டாலோ உடனடியாக மருத்துவரை காண்பிப்பது நலம்.

2. மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் ஆரோக்கியம் இருப்பவர் ஹஜ் செய்வது நல்லது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புகள் அதிகம். தவாஃப், சயீ கடமைகளை நிறைவேற்றும் போது அதிகமாக நடக்க வேண்டும். ஊரிலிருக்கும் நிறைய ஹாஜிகள் அதிகமாக நடப்பதில்லை. எனவே புறப்படுவதற்கு முன் அதிகமாக நடப்பதை பழக்கமாக்கிக் கொண்டு உடல்ரீதியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சவுதி அரேபியாவுக்கு வந்த பிறகு ஏதேனும் நோய் தென்பட்டால் நன்றாக ஓய்வெடுத்து அந்நோய் பூரணமாக குணமான பின்னரே வெளியே இறங்க வேண்டும். வெளியே செல்வதால் நோய் அதிகமாகிவிட்டால் ஹஜ்ஜின் முக்கிய விஷயங்களை செய்யமுடியாமல் 5 நாட்கள் எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுவிடும். உடலில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே ஹாஜிகள் உம்ராவும் ஹஜ்ஜூம் செய்ய வேண்டும்.

3. பணம், டிக்கெட், மருந்துகள் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கையில் கொண்டு போகும் பேக்கில் வைக்கவும். ஏனென்றால் லக்கேஜூகள் வௌ;வேறு வண்டிகளில் ஏற்றப்படுவதால் நம்முடைய அவசர தேவைக்கு அவை கிடைக்காமல் தாமதம் ஏற்படும்.

4. ஹாஜிகள் எப்பொழுதும் தங்களுடைய முஅல்லிம் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டையின்றி வெளியில் எங்கும் செல்லக் கூடாது.

5. புனித ஹரமில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தொழுவதற்காக தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. எனவே தம்பதிகள் ஹஜ்ஜூக்கு செல்லும் போது ஹரமில் தொழுதுவிட்டு மீண்டும் சந்திக்க, ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பார்த்து வைப்பது சிறந்தது. ஹரமிற்கு பல வாசல்களும் அவற்றிற்கு எண்களும் அதில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றில் ஏதாவதொன்றை அடையாளமாக்கிக் கொள்ளலாம். வழி மாறி சென்றுவிட்டால் ஹரமிற்கு வெளியே முக்கிய இடங்களில் சேவை செய்து கொண்டிருக்கும் இந்தியன் ஹஜ்ஜூ மிஷன் பணியாளர்களிடம் உதவி கோரலாம். இந்தியா என எழுதப்பட்ட ஜாக்கெட்(சட்டை) அணிந்த அவர்கள் உங்களுடைய தங்குமிடத்திற்கு வழி சொல்வர்.

6. இந்த வருடம் ஹாஜிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் புனித இடங்களில் தங்குகின்றனர். இம்மாதம் அதிகமாக குளிரக்கூடிய மாதங்களாகும். குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஜாக்கெட், குளிர் தொப்பி மற்றும் கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டியதுவரும். இரு புனித ஆலயங்களுடைய தரைப்பகுதியில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ளதால் ஜில்லென்றிருக்கும். எனவே தொழுகை, தவாஃப் மற்றும் உம்ராவிற்கு செல்லும் போது காலில் சாக்ஸ் அணிந்து செல்வது உத்தமம்.

7. ஹாஜிகள் தங்களுடைய பணம் முழுவதையும் தாங்களே வைத்திருக்காமல் தங்களுடைய முஅல்லிம் வசம் கொடுத்து விட்டு தேவைப்படுபவற்றை மட்டும் தேவைப்படும் நேரங்களில் வாங்கிக் கொள்ளலாம். தனியாக செல்லும் நேரங்களில் தெரியாத டாக்ஸிகளில் ஏற வேண்டாம். திருட்டு டாக்ஸிகளில் பயணம் செய்யும் ஹாஜிகளை வெகு தொலைவிற்கு கொண்டு சென்று கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

8. சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சாலையை கடக்கும் போது இடதுபக்கத்திலிருந்து வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து செல்லவேண்டும். இந்தியாவில் நாம் வலதுபக்கத்தை கவனிக்கின்றோம்.

9. இந்தியன் ஹஜ் மிஷன் மக்காவில் கிஸ்லா பார்க்கின் எதிர்புறத்திலிருக்கும் ஜர்வல் கிஸ்லாவில் செயல்பட்டு வருகின்றது. 11 கிளை அலுவலகங்களும் இருக்கின்றன. தங்களின் கிளை எது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியன் ஹஜ் மிஷன், கிளை அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேசன், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களின் தொலைபேசி எண்களை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும்.

10. சுத்தமான உணவுகளை மட்டுமே ஹஜ் வேளையில் விற்க வேண்டுமென்ற சவுதி அரசின் கட்டளையின் படி அதை உறுதிசெய்ய அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் திடீர் ஆய்வுகளை நடத்தி வந்தாலும் திறந்தவெளிகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் கடைகளிலிருந்து உணவுகளை வாங்குவது கூடாது. சவுதியில் தங்கி இருக்கும் நாட்களில் போஷாக்குள்ள பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டிகள் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். குறிப்பாக மினாவில் தங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. முக்கிய ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம். அவற்றை ஊரிலேயே நம்பத்தகுந்தவரிடம் ஒப்படைத்து விட்டு பயணம் புறப்படுவது நல்லது. ஆவணங்கள் தொலைந்து விட்டால் இந்தியாவில் அவற்றின் நகலை பெறுவது சிரமமாக விஷயமாகும்.

12. மக்காவில் குறிப்பாக மினாவில் ஹாஜிகள் திறந்த வெளியில் துப்புவதோ கழிவுகளை வீசுவதோ கூடாது. குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

13. தங்களுக்கு சொந்தமில்லாத எந்த பொருட்களையும் எங்கு கண்டாலும் ஹாஜிகள் எடுப்பது கூடாது. புனித இடங்களில் பல பகுதிகளிலும் சிசிடிவி காமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக போலீஸ் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். பிறரது பொருட்களை எடுத்து பிடிபட்டால் திருட்டுக் குற்றத்தில் சிறை செல்ல வேண்டியது வரும்.

14. ஏதாவது காரணத்தால் தங்களை போலீஸ் பிடித்து பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியாமல் கையெழுத்து போட வேண்டாம்.

15. கடைகளில் சென்று மொட்டையடிப்பது சிறந்தது. ஏனெனில் ஆங்காங்கே கத்தியும் பிளேடும் கொண்டு சுற்றித்திரியும் நபர்களிடம் மொட்டையடித்தால் சுத்தமில்லாத உபகரணங்களால் தலையில் காயங்கள் ஏற்படுவதோடு நோய் தாக்கும் அபாயம் ஏற்படும்.

16. சாதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளுடன் கூடிய ஒரு சிறிய முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது நல்லது.

17. எவருக்கேனும் சுகவீனம் ஏற்படும் பொழுது உறவினர்கள் இல்லையெனில் உடனிருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.

18. சவுதி அரேபியா ஒரு பாலைவன பூமி. ஆனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படும் அற்புதமான நகரம் மக்கா. லட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் அந்த இடத்தில் அனைவருக்கும் இறைவன் தண்ணீரை தருகிறான். அந்த தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு தொழுகையின் போதும் மக்கள் கூட்டம் ஹரமை நோக்கி வரும். எனவே வயதானவர்கள் தொழுகை நேரத்துக்கு சற்று முன்னதாகவே வந்து எலிவேட்டர்(சுழலும் மின்சார படிக்கட்டு) மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் எலிவேட்டரின் முன்பாக காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

20. ஹாஜிகள் மதீனாவில் 8 நாட்கள் தங்குவர். மதீனாவிலிருந்து மக்காவிற்கு 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். வழியில் அடிக்கடி நிறுத்துவதற்கு டிரைவர் தயங்குவது வழக்கம். எனவே வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்காமல் கழிவறைக்கு செல்வது முதல் உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை முன்பே எடுத்து தயாராக இருக்க வேண்டும்.

21. மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால் ஹாஜிகள் தங்கள் கூடாரங்களிலிருந்து வழி தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. கூடாரத்தை கண்டுபிடிக்க முடியாது போனால் 'லாஸ்ட் பில்கிரிம் சென்டர்' (Lost pilgrim Center) என்ற காணாமல் போன ஹாஜிகளை கவனிக்கும் இடத்திற்கோ அல்லது இந்திய ஹஜ் மிஷன் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். மினாவில் ஒவ்வொரு பகுதியிலும் கூடாரங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே ஹாஜிகள் ஒவ்வொருவரும் தங்கள் கூடாரங்களின் எண்ணையும் அந்த பகுதியின் எண்களையும் அறிந்திருப்பது அவசியமாகும். வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் தனியாக எக்காரணத்தைக் கொண்டும் ஜம்ராவில் கல்லெறிய செல்லக் கூடாது. அதுபோன்று வீல்சேருடனும் கையில் லக்கேஜூகளுடனும் செல்வது கூடாது. மக்கள் கூட்டத்தின் இடையில் அது நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதோடு போலீசார் லக்கேஜூகளை பறிமுதல் செய்து விடுவார்கள்.

22. மினா என்பது 30 லட்சம் ஹாஜிகள் 5 நாட்கள் சங்கமிக்கும் ஒரு பள்ளத்தாக்காகும். அதன் ஒவ்வொரு அடி நிலமும் விலைமதிக்க முடியாதவை. அங்கு கூடாரத்தில் தங்குவதற்கும் உறங்குவதற்கும் மிகக் குறைந்த இடமே கிடைக்கும். அதனால் வெளியிலிருந்து யாரேனும் வந்து தங்கினால் உடனடியாக அதை முஅல்லிமிடம் தெரிவிக்க வேண்டும்.

தங்களுடைய ஹஜ் பயணம் எந்தவித சிரமமுன்றி அமைய வேண்டும் என்பதற்காக இந்தியன் எம்பஸியிலிருந்து ஸயீத் அஹமது பாவா (கோன்ஸல் ஜெனரல், ஜித்தா), பி.எஸ்.முபாரக் - கோன்ஸல்(ஹஜ், தகவல் மற்றும் செய்தி (B.S.Mubarak - Consul (Haj, Press & Information) ஆகியோர் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிவித்துள்ளனர். இந்த விபரங்களை துண்டு பிரசுரங்கள் மூலமாக தமிழத்திலிருந்து ஹஜ் செல்வோரிடத்தில் விநியோகம் செய்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : உணர்வு

Thursday, October 29, 2009

சனதன் சாஸ்தா அமைப்பு தடை செய்யப்படுமா?

மாலேகான் மற்றும் இந்தியாவின் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்பான 'சனதன் சனஸ்தா' என்ற அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தேசிய பாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கார்கரே தெரிவித்திருந்தார். ஆனால் மெஜாரிட்டி மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ அதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என பயந்த அரசு அதை தடை செய்யாமல் மௌனம் காத்தது. அதன் பயனாக நாம் ஓர் உண்மை அதிகாரியான கார்கரேயை இழந்துவிட்டோம். அவரது இழப்பிற்கு பின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி இருப்பதை கடந்த வாரம் கோவாவில் நடந்த குண்டுவெடிப்பு காண்பிக்கின்றது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்காக 'சனதன் சனஸ்தா' எனும் இந்துத்துவ அமைப்பு திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் படி அவ்வமைப்பை சேர்ந்த மெஸ் குண்டாபட்டீஸ், யோகேஷ்நாயக் என்பவர்கள் மக்கள் அதிகமாக கூடும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் திட்டத்துடன் கோவா மாநிலத்தில் மர்ம கோவா எனும் நகருக்கு வந்து நரகாசுரனின் கொடும்பாவி எரிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை இவர்கள் பொருத்திக் கொண்டிருக்கும் பொழுது பயங்கர சத்தத்துடன் அந்த வெடிகுண்டுகள் வெடித்தன. வெடிகுண்டுகளை வைத்த சனதன் சனஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சார்ந்த அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதை கடந்த வார உணர்விலும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

மாலேகான் குண்டு வெடிப்பு உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற பிரக்யா சிங் எனும் தீவிரவாதிப்பெண் சாமியார் நிர்வாகியாக இருக்கும் அமைப்பு தான் இந்த சனதன் சனஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பு. இவளது ஆதரவாளர்கள் தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து நகரில் வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்ட போது நகரின் மூன்று பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த பயங்கர வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் ஏராளமானோர் பலியாகி இருப்பர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் சனதன் சனஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை போலீஸார் கண்டறிந்தவுடன் உடனடியாக மர்ம கோவா நகரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பான்டா எனும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த இயக்கத்தின் ஆசிரமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 30 அறைகளை சோதனை செய்த போது குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அங்கிருப்பது தெரியவந்தது. வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் கருவிகள், மின்சார சாதனங்கள், டைமர் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியதுடன் ஆசிரமத்தில் இருந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய சுரேஷ் சந்தீப் ஷிண்டே வீரேந்திரா ஆகியோர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் சுரேஷ் என்பவர் குண்டு வெடிப்பில் பலியான யோகேஷ் நாயக்கின் சகோதரன் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ஆசிரமத்தில் 167 வெளிநாட்டினர் தங்கி இருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னும் அரசு இன்னும் ஏன் மௌனம் காக்கின்றது. அது தடை செய்யப்பட வேண்டும். அந்த அமைப்புகள் எங்கெல்லாம் பரவியிருக்கின்றதோ அவற்றையெல்லாம் கண்டெறிந்து துடைத்தெறிய வேண்டும். அத்துடன் ஜாமீனுக்கு அப்பீல் செய்துள்ள தீவிரவாத சன்னியாசிப் பெண் பிரக்யாசிங்கையும் அவளது கூட்டாளிகளையும் ஜாமீனில் வெளிவராத வகையில் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் சனதன் சாஸ்தா அமைப்பை தடை செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக மஹாராஷ்டிரா டி.ஜி.பி விர்க் தெரிவித்துள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும் கூட அதை ஆறப்போடாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதனால் பயங்கரவாதிகள் தங்கள் திட்டங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதையும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மறைத்து வைப்பதையும் தடுக்க முடியும். இல்லையெனில் தலையை விட்டு வாலை பிடித்த கதையாகி போகும். அதை அரசு உணர்வது நல்லது.

அமெரிக்காவின் மறைமுக தாக்குதல், மாவோஸ்டுகளின் வெறிச்செயல், இந்தத்துவ தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகள் போன்றவற்றை அரசு பொடுபோக்காக கருதாமல் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதன்றி பயங்கரவாதத்தை வேரறுக்க கைகோர்ப்போம் என்ற வெற்று முழக்கத்தால் பயனேதுமில்லை.

நன்றி : உணர்வு

Wednesday, October 28, 2009

உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக...




தொலைக்காட்சிக்கு கட்டுப்பாடுகள் வேண்டுமென்று உலகெங்கிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஏனெனில் சினிமாவுக்கு தணிக்கைத்துறை இருப்பது போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய தனியாக துறை எதுவும் அரசால் ஏற்படுத்தப் படவில்லை. (தமிழக தணிக்கை துறை செயலிழந்து போயிருப்பது தனி விஷயம்) அதன் காரணமாக நிகழ்ச்சிகளுக்கு மெருகேற்றவும் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் தருகிறோம் எனும் பெயரிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. தனிநபர் தாக்குதல், நகைச்சுவை எனும் பெயரில் தன்மானத்துக்கு பங்கம் விளைவித்தல் போன்றவற்றோடு ஆபாசங்களை திணித்தல் ஆகியவை கட்டுப்பாடின்றி அரங்கேறி வருகின்றன. சினிமா, அரைகுறை ஆடையுடன் கூடிய பாடல்கள், வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாசக் காட்சிகளை அரங்கேற்றி வரும் தொலைக்காட்சிகள் அதைவிட மோசமாக என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றன.


இந்தியா போன்ற கட்டுப்பாடற்ற நாடுகளில் எதுவும் செய்ய இயலாமல் போனாலும் இதை அடியோடு ஒழித்துக் கட்ட சவுதி அரேபியா அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

லெபனான் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் எல்.பி.சி (டு.டீ.ஊ) தொலைக்காட்சியில் 'போல்டு ரெட் லைன்' என்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. திருமணத்திற்கு முன் பின் செய்யும் அந்தரங்க செயல்களை பகிரங்கப்படுத்துவது தான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதில் கலந்து கொண்ட மாசின் அப்துல் ஜவாத் எனும் சவுதி அரேபியாவைச் சார்ந்த இளைஞன், தான் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறான், எத்தனை பெண்களை கற்பழித்திருக்கிறான், எத்தனை பெண்களை விபச்சாரம் செய்திருக்கிறான் என்பதை பகிரங்கப்படுத்தியதைக் கண்டு அரபுலகமே அதிர்ச்சியுற்றது. பெண்களை எப்படி தன் வலையில் வீழ்த்துவது என்பதையும் அந்த நிகழ்ச்சியில் அவன் சொல்கிறானாம். நண்பர்களின் துணையுடன் அவன் செய்த செயல்களையெல்லாம் கேட்டு அரபுலகம் கொதித்தெழுந்தது.

சவுதி அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்து மாசின் அப்துல் ஜவாத் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த கொடிய செயலுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் முடிவு கட்டும் வகையில் மாசினுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் 1000 சாட்டையடியும் விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியது. அவனது இரண்டு நண்பர்களுக்கும் தலா இரண்டு வருடங்கள் சிறையும் 300 சாட்டையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புகள் அரபுலகு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த இளைஞன் தனது குடும்பத்தை சார்ந்த பெண்களுடனும் திருமண ஆசை கூறியும் தான் ஏமாற்றியுள்ளான். இதை ஒரு பாடமாகக் கொண்டு அந்நிய ஆண்களிடத்தில் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டுமென்றும் பெற்றோர் தங்கள் பெண்களை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டுமென்றும் அரபிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்ததாக சவுதி அரசு, தவறு செய்த இளைஞனுக்கு மட்டும் தண்டனை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த நிகழ்ச்சியை தொகுத்தவர் முதல் காமிராமேன் வரை அனைவருக்கும் தண்டனை வழங்கியது சிறப்பாக கருதப்படுகிறது. சமுதாயத்தை சீரழித்து ஒழுக்கக்கேட்டை புகுத்தும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சவுதி பெண்ணான, நிகழ்ச்சியின் கோ-ஆர்டினேட்டர் ரோஸானா அல்யாமி என்பவருக்கு, வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகவில்லை. மாசின் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்த பிறகே ரோஸானா ஆஜரானார். அப்போது அப்பெண்ணுக்கு 60 சாட்டையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் நீண்ட விசாரணைக்கு பின் ஜித்தா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் காமராமேனுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரையறை வேண்டும். யாரும் எதையும் செய்து விடலாம், சொல்லி விடலாம் எனும் போங்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ள ஒரு வியாதியாகும். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் அல்லது வன்முறையை உருவாக்கும் செய்திகளை அல்லது நிகழ்ச்சிகளை கண்டிக்கும் போது அதை பத்திரிகை சுதந்திரம் எனக் கூறி அதை நியாயப்படுத்துபவருக்கு சவுதி அரேபியா சரியான பாடம் கற்பித்துள்ளது. இந்த தீர்ப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் தொலைக்காட்சிகளை ஆளும் அரசுகள் கட்டுக்குள் கொண்டுவருமானால் வன்முறையும் ஆபாசமும் விலகி சமுதாயம் சீர் பெறும்.

ed;wp : czh;T

Sunday, October 25, 2009

நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!

ஷப்னம் ஹாஷ்மிபாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா?

... ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா, பனஸ்கந்தா ஆகிய இடங்களிலிருந்தா?

இங்கிருந்து அழைப்பவர்கள் தொண்ணூறு விழுக்காட்டினர் முஸ்லிம்கள்! மூன்று நாட்களுக்குமுன் அமெரிக்காவில் இருந்து காலை 2 மணிக்கு அழைப்பு, அழைத்தவர் ஒரு முஸ்லிம்; இன்று கராச்சியிலிருந்து, நேற்று காஷ்மீரிலிருந்து.

உங்கள் மின்மடல்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன!

ஆட்வாணி, வாஜ்பேயியைக் கேலியாகப் பேசுகிறீர்களா?

மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்கிறீர்களா?

உங்கள் புத்தக அலமாரியில் அரபி, உருது புத்தகங்கள் இருக்கின்றனவா?

உருது புத்தகம் கவிதைப்புத்தகமா? நம்ப முடியாது! கவிதை வடிவில் ஒரு பயங்கரவாதச் செயலுக்கான திட்டம் நிச்சயம் இருக்கும்!

அருகிலிருக்கும் புத்தகத்தில் ஹிட்லர் பெயர் அடிக்கோடிடப்பட்டுள்ளதே! என்ன சொன்னீர்கள்? மோடி ஹிட்லருக்கு ஒப்பானவரா? நிச்சயம் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்!

என்னது? உங்களிடம் கோத்ரா சம்பவம் குறித்த ஆவணங்கள் உள்ளனவா? அதுகுறித்த இவ்வளவு வீடியோ போட்டோக்கள் உங்களிடம் எதற்கு? மோடியின் பெயரைக் களங்கப்படுத்தும் சதி தானே இது? ஐஎஸ்ஐ யுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கும் சாத்தியம் உள்ளது.

இதென்ன மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூர் வரைபடங்கள்? எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் எனத் திட்டம் தீட்டத் தானே?

நாள் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்தவாரம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எதற்கா? வேறு எதற்கு? வழியில் உங்களை விடுவித்ததாகச் சொல்லி நீங்கள் நகரும் போது என்கவுண்டரில் போட்டுத் தள்ளத்தான்!

உங்களிடமிருந்து கைப்பற்றப் படப்போகும் ஆதாரங்களைப் பற்றிக் கேள்வி வேண்டாம். உங்கள் கைகளிலும் பைகளிலும் எங்கள் இருப்பில் இதற்காகவே சேர்த்து வைத்திருக்கும் நிறைய வெடிபொருள்களையும் ஏகே47 ரக துப்பாக்கிகளையும் நாங்களே திணித்து விடுவோம். பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னதாகவே தகவல் சொல்லி விடுவோம். அடுத்த நாள் முழுக்க நீங்கள்தான் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தெரிவீர்கள் - பிணமாகத்தான், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்!

தலைப்பு என்னவா? தயார் செய்துவிட்டோம்!

கொடிய பெண் தீவிரவாதி என்கவுண்டரில் கொலை!

ஃஃஃஃஃஃஃ

இன்னும் என்ன தயக்கம் நீதிமான்களே, காவலர்களே?

என்னிடம் உருது நூல்கள் நிறைய உள்ளன;

எனக்கு அமெரிக்காவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் முஸ்லிம்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன;

நான் படித்தவள்; இருகுழந்தைகளின் தாய்; ஓர் அறிவியலாரின் மனைவி; நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! என்னிடம் உருது நூல்கள் உள்ளன;

இந்தியாவின் முக்கிய நகரங்களின் வரைபடங்கள் உள்ளன!

வேறென்ன வேண்டும் பொதுமக்களைக் காக்கும் கடமை தவறாக் காவலரே!

வா, வந்து என்னைச் சுட்டுக் கொல்!

-ஷப்னம் ஹாஷ்மி

நன்றி : சத்தியமார்க்கம்.காம்

கோவா குண்டு வெடிப்பு : மத வெறியாட்டம்!

இந்திய சுதந்தர தினமானாலும் சரி, குடியரசு தினமானாலும் சரி, அல்லது இந்துக்களின் எந்த பண்டிகைகளானாலும் சரி, கொண்டாட்டத்தைக் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி; குண்டு வைக்க முயற்சி என்று பத்திரிகை - தொலைக்காட்சிகளில் கூறி ஊடகவியலாளர்கள் தங்களை அரிப்பை தணித்துக் கொள்வர்; அதே போல, காவல்துறையும் தமது பங்கிற்கு சோதனைகள் என்ற பெயரில் பொய்யான பதட்டத்தை உருவாக்குவர்; இதனையெல்லாம் கேள்விப்படுகின்ற - பார்க்கின்ற பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சியை உருவாக்குவதே இதன் நோக்கம்.

தீபாவளியை முன்னிட்டு குண்டு வைத்து அந்தப்பழியை முஸ்லிகளின் மேல் போடுவதற்காக, இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவில், கடந்த 16.10.1009 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒரு ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை எடுத்து வரும்போது, தவறுதலாக வெடித்து, ஒருவன் மெல்குந்தா பாடீல், இறந்து விட்டான்; மற்றொருவன் யோகேஷ் நாயக், பலமான காயங்களுடன் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இவர்கள் இருவரும் மாலேகன் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சத்வி ப்ரக்யா சிங் தாகூருக்கு மிக நெருக்கமானவர்கள். இந்த ஸ்கூட்டருக்குச் சொந்தக்காரன் வேறு யாருமில்லை; நிஷாத் பகாலே என்ற இந்துத்வ தீவிரவாதி; சனாதன் சவுன்ஸ்தா என்ற இந்துத்வ தீவிரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர்,. இந்த அமைப்பு, கோவாவில், பொண்டா என்ற பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

சனநெரிசலுள்ள மார்கோ பகுதியில், கிரேஸ் சர்ச்சுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா இடர்னோ ஸ்கூட்டரில் தான் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு, நரகாசுரனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்த பகுதி தான் இது. தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, இந்து மக்கள் மீது குண்டுகள் வைத்து தாக்குதல் நடத்தி, பழியை முஸ்லிம்கள் மேல் போடுவதற்காக செய்த சதிதான் இது என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.

கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவிக்கையில், இந்துத்வ தீவிரவாத அமைப்பு சனாதன் சவுன்ஸ்தா வின் தொடர்பை உறுதிப்படுத்தினார். மேலும், அவ்வமைப்பின் தலைமையத்தில் சோதனை செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்துடைப்பாக விசாரணையை நடத்தாமல், இதில் ஈடுபட்ட இந்த அமைப்பினரும், இதற்கு தூண்டுகோலாக இருந்த மற்ற தீவிரவாத இந்துத்வ அமைபினரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்துத்வவாதிகளின் இந்த இழிசெயலை நடுநிலை இந்து சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரும் பணியும் நமக்கு உள்ளது. இவற்றைக் கண்டாவது, கமல்ஹாசன் போன்ற அறிவிஜீவிகள் (?) தங்களது கருத்தை மாற்றிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : உணர்வு

Thursday, October 15, 2009

திரைத்துறையினரின் தொடர் தீவிரவாதம் - தூங்கும் சென்சார் துறை!


இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவரையும் தீர்த்துக்கட்டும் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் அதன் வெற்றியை தொடர்ந்து அதே பார்முலாவில் இன்னொரு படத்தையும் தந்துள்ளார். வழக்கமாக அர்ஜூன் அல்லது விஜய்காந்த் நடிக்கும் படங்கள் தான். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் அந்த ஃபார்முலாவை இப்போது கமலஹாசன் கையில் எடுத்துள்ளார்.



படத்தில் வரும் காட்சிகள் சில...


அப்துல்லாஹ் - அல்காயிதாவின் டைரக்ட் காண்டாக்ட். 42 இடங்களில் டிரையினிங் காம்ப் நடத்தி தீவிரவாதிகளுக்கு ஜிஹாத் பயிற்சி கொடுத்தவன். அதில் 20 காம்ப் இந்தியாவில் உள்ளது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அவனிடம் டிரையினிங் ஆகி இருக்காங்க. எல்லோரும் 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.


அஹமதுல்லாஹ் - இவன் தாலிபான். கந்தகாரில் பயிற்சி பெற்றவன். அப்துல்லாவின் வலது கை. ஹமாஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் குரூப்புடன் இவனுக்கு கனெக்ஷன் உண்டு. லஷ்கர் இ தய்யிபா டெர்ரரிஸ்டின் மாஸ்டர் மைண்ட்டான முஸம்மிலுக்கு இவன் வெரி குளோஸ்.

இனாயதுல்லாஹ் - ஜமாஅத்து தவா வின் ஏரியா டெபுடி கமாண்டர். லஷ்கர் இ தய்யிபாவின் பொலிடிக்கல் விங்க். சாப்ட்வேர் எஞ்சினியர். படத்துக்குள்ளே தகவலை ஒளித்து வைப்பதில் இவன் கில்லாடி. பல டெர்ரரிஸ்ட் அமைப்பின் வெப்சைட்டிற்கு இவன் தான் டிசைனர்.

கரம்சந்த்லாலா - இந்து. ஏ.கே.47, ஆர்.டி.எக்ஸ் போன்ற எதுவாக இருந்தாலும் காசு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் சப்ளை செய்வான்.

கமல்ஹாசன் பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு கமிஷனர் மோகன்லாலை மிரட்டி சிறையிலிருக்கும் இந்த நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறார். இவர்களில் இருவர் கோவையில் வெடிகுண்டு தாக்;குதல் நடத்தியதற்காக கமிஷனரால் கைது செய்யப்பட்டவர்கள்.


இந்த படம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது கோவை கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதால் கைது செய்யப்பட்டது போலவும் குஜராத் கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் அதன் காரணத்தால் தீவிரவாதியாகி இந்துக்களை கொல்ல குண்டு வைத்ததாகவும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். ஹமாஸ், லக்ஷர் தெய்பா, ஜம்அத்தே தவா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று போலீஸ் அதிகாரி கூறுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணை மீட்க போராடிவரும் ஹமாஸ் என்ற ஜனநாயக அமைப்பையும் இந்தப் படம் தீவிரவாதிகள் லிஸ்டில் சேர்த்துள்ளது.


இந்த 4 தீவிரவாதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் நகரத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் என கமல் மிரட்டுவதால் அதன் காரணமாக அவர்களை விடுவிக்க போலீஸ் ஒத்துக் கொள்கின்றது. அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்க கொண்டு செல்லும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் முஸ்லிம். பெயர் ஆரிப்.


நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆரிப் இருந்தாலும் அவரையும் கண்காணிக்கும் படி கமிஷனர் சொல்லி அனுப்புகிறார். மொத்தத்தில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று இந்த சினிமா சொல்கிறது. அந்த தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆரிபை நக்கலடிப்பது போலவும் ஆரிபை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வது போலவும் காண்பிக்க படுகின்றது.


இந்த நான்கு தீவிரவாதிகளில் முஸ்லிமான மூன்று பேரும் அப்பாவி மக்களை கொல்பவர்கள். ஆனால் இந்துவான கரம் சந்தோ யாரையும் கொல்வதில்லை. காசுக்காக ஆர்.டி.எக்ஸ் சப்ளை பண்ணுபவன், அவ்வளவு தான். தவறுக்கு வருந்துபவன், ஆனால் முஸ்லிம்களோ காபிர்களை கொல்ல வேண்டுமென்று துடிப்பவர்கள் போல் காட்சிகள் இருக்கின்றன.


இந்த நால்வரையும் விடுவித்த கமல் அவர்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது போல் ஜீப்பில் ஏறச் சொல்ல அதில் கமல்ஹாசனால் வைக்கப்பட்ட வெடிகுண்டின் மூலமாக அந்த நால்வரும் சாகின்றனர். இது தான் கதை.


முஸ்லிம் தீவிரவாதிகளை போலீஸ்காரர்கள் கூட விட்டுவிடுகின்றனர். எனவே அவர்களை நாமே கொல்வது சிறந்தது என்கிறார் கமல். ஏற்கனவே கமலை அடையாளம் காட்டியவர் கூட கமல் செய்தது சரி எனக்கருதி அவரை அடையாளம் சொல்ல மறுக்கிறார். அவர் இருக்கும் இடத்தை கம்பியூட்டர் மூலம் கண்டுபிடிக்கும் ஒரு ஐ.டி மாணவன், கமலை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியாக கமல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கமிஷனர் மோகன்லால் கூட கமல்தான் குண்டு வைத்தவர் என்பதை அறிந்தும் அவரைப் போக செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு இந்துத்துவ வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சென்சார் போர்டு எவ்வாறு அனுமதித்தது என நமக்கு புரியவில்லை. இந்த படம் சென்சார் போர்டுக்கு செல்லாமல் வந்திருக்க வேண்டும், அல்லது லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது அங்கும் காவிசிந்தனை ஊடுருவி இருக்க வேண்டும்.


இதை சமீபத்திய கோர்ட் தீர்ப்பு உண்மைபடுத்துகின்றது. வக்கீல்களை மோசமாக சித்தரித்ததாக கூறி விஜய் மற்றும் சிவகாசி பட தயாரிப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.


வக்கீல்களை மோசமாக சித்தரிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களுக்கு எந்த கட்டப்பாடும் கிடையாது, தாங்கள் விரும்பியதை திரையிடலாம் எனக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் தணிக்கை துறையையும் சாடியுள்ளார்.

சென்சார் போர்டு செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், தணிக்கை துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்சார் போர்டு ஒப்புக்கு செயல்படுகிறது, உண்மையாக செயல்படவில்லை என்ற கருத்துக்கு உறுப்பினர்கள் இடம் கொடுக்கக் கூடாது. சமூக நலன் கருதி ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.


சினிமாவில் மற்றவர்களை அவதூறாக, மோசமாக மற்றும் ஆபாசமாக சித்தரிக்காமல் இருக்கும்படி செய்வதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவதூறான காட்சிகளை பொழுதுபோக்கு எனும் பெயரில் எடுக்கக்கூடாது. தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஒரு சமுதாயத்தின் மீது அவதூறு கூறுவதை எவ்வாறு தணிக்கை துறை அனுமதித்தது. இலங்கையில் பயங்கரவாதம் செய்தும் இந்தியாவில் ராஜீவ் காந்தியை கொலையும் செய்த விடுதலை புலிகள் எனும் தீவிரவாதிகளை காண்பித்திருந்தாலும் ஏற்றிருக்கலாம். அவர்கள் இந்துக்கள் என்பதால் கமல் அவர்களை விட்டுவிட்டாரா?


மாலேகான் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் புரோகித் உட்பட உள்ளவர்களை தீவிரவாதியாக காண்பித்து இருந்தாலும் இது உண்மை எனக் கூறலாம். தீவிரவாதிகள் அபினவ் பாரத், ஆர்,எஸ்,எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்றதாக கூறினாலும் அது உண்மையானது. ஆனால் முற்றிலும் அதை மூடி மறைத்துவிட்டு இந்து தீவிரவாதிகள் செய்த செயல்களையெல்லாம் முஸ்லிம்கள் செய்ததாக காண்பித்திருக்கிறார்கள்.


இதை திரையாக்கியவனின் கையை ஒடித்து அல்லது திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் சென்று திரையை கிழித்து தியேட்டரை தரைமட்டமாக்கினால் இனி எவனும் இது போன்ற திரைப்படத்தை எடுக்கமாட்டான். போட்ட பணம் கூட வராது என்ற நிலையில் அது தடுக்கப்படும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற சங்பரிவாரின் செயல்.


ஆனால் முஸ்லிம்கள் அதை செய்யமாட்டார்கள் எனும் தைரியத்தில் தான் இவ்வாறு சினிமா எடுக்கப்படுகின்றது. அதுவும் அவர்கள் மீது அவதூறி கூறி. அராஜகம் செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் மௌனமாக இருக்கின்றனர். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்த படம் தடைசெய்யப்பட வேண்டும்.


அத்துடன் இதற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களை நேரடியாக தாக்குவதையும் வன்முறையை ஊக்குவிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்கலாகாது. முஸ்லிம்களும் நடுநிலைவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அதற்கு முன்வர வேண்டும்.

நன்றி : உணர்வு

Monday, October 12, 2009

யானைப்பசிக்கு சோளப்பொறி !

இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்காக 2500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறதென மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்திர பிரதேசம் பரூக்காபாத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் நலனில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் இதை செயல்படுத்த தன்னார்வ தொண்டர்களை அரசு நியமிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்த ராஜேந்திர சச்சார், ஆய்வின் முடிவில் மற்ற அனைத்து சமூகத்தினரையும் விட முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு வீடுகளின்றி ரோட்டோரங்களில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டது அனைவருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிலையை அவ்வபோது சுட்டிக்காட்டி 'பார்த்தீர்களா நமது நிலையை' என்று ஒவ்வொரு முஸ்லிம் அமைப்புகளும் பேசியும் எழுதியும் போராடியும் தான் வருகின்றனவே தவிர தீர்வுகள் கிடைத்த பாடில்லை.

நோன்பு நேரத்தில் இப்தார் விருந்துக்கு அரசியல்வாதிகளை அழைத்த சில முஸ்லிம் பிரமுகர்கள், ரம்ஜான் பண்டிகைக்கும் இலவச வேட்டி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களே தவிர சமுதாய முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்து போட முன்வரவில்லை.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எனும் பெயரில் செல்வந்தர்களின் கடனைக்கூட தள்ளுபடி செய்து கோடிக்கணக்கான ரூபாயை செலவிடும் அரசின் செவிகளில் முஸ்லிம்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம், வட்டியில்லா கடன் வழங்குங்கள் என்று முழங்கியபோதும் அரசு செவிசாய்க்கவில்லை.

முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற திட்டங்கள் வகுக்கப்படும் என தேர்தல் நேரங்களில் அளித்த வாக்குறுதியை கண்டு கொள்ளாமல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, 'பாம்பும் சாக வேண்டும், தடியும் முறிந்துவிடக் கூடாது' எனும் ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்தது போலவும் வெளியே தெரிய வேண்டும், ஆனால் அவர்கள் பயன்பெற்றுவிடவும் கூடாது என்பது போல இந்த திட்டத்தை அரசு அறிவித்தள்ளதாக முஸ்லிம்களிடத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த 2500 கோடி ரூபாய் என்பது ஊழியர்களை அமர்த்தி விநியோகித்தால் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட இந்த பணம் போதாது என்பது அரசுக்கே தெரியுமாதலால் தான் அதற்கு ஊழியர்களைக் கூட நியமிக்காமல் தன்னார்வ தொண்டர்கள் மூலம் அத்திட்டத்தை செயல்படுத்துகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் கூறுவதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஏனெனில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் 90 மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு இந்த 2500 கோடி ரூபாய் பயன்படப் போகிறதாம். இதனால் உத்தர பிரதேசிலுள்ள 21 மாவட்டங்கள் வளர்ச்சி பெறுமென்றும் 15 சதவிகித சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டுமென்று சல்மான் வலியுறுத்தியுள்ளாராம். இதனால் உபியில் இன்னும் 15 மாவட்டங்கள் பயன்பெறுமாம். உபியில் மட்டும் 30 மாவட்டங்கள் பயன்பெறுமாம். அப்படியானால் மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் 60 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து உதவி தொகை வழங்குவார்கள் போலும். சல்மான் குர்ஷித் உபியின் சிறுபான்மை அமைச்சரா அல்லது மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரா என நமக்கு விளங்கவில்லை. சல்மானின் கணக்குபடி உபி யின் 30 மாவட்டங்கள் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு மாவட்டங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. (நமது வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அவர்கள் முதல்வரின் நண்பர் ஆதலாலும் அவர் கூறி நமக்கு இடஒதுக்கீடு கிடைத்தது போல!? அவர் கூறினால் முதல்வர் உடனடியாக கேட்பார் என்பதாலும் மத்திய அரசு வழங்கும் இத்திட்டத்தினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பயன்பெற வாய்ப்புண்டு!?).

அத்துடன் இந்த உதவித் தொகை முஸ்லிம்களுக்கு மட்டும் என ஒதுக்கப்படவில்லை. மாறாக சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்றே ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் என வரும்போது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என இன்னும் ஏராளமானோர் இடம் பெறுவர். அந்த வகையில் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறாமல் போகாது.

90 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதானால் மொத்தத்தில் மூன்று மாநிலங்களுக்கு மேல் பயன்பெற முடியாது. அதிலும் பல லட்சம் சிறுபான்மையினரை கொண்டுள்ள மாவட்டங்களில் சில கோடி ரூபாயைக் கொண்டு எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்திட முடியாது.

மாயாவதியின் சிலையை மாநிலம் முழுவதும் நிறுவுவதற்காக பல்லாயிரம் கோடி அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் சிரமப்படும் சிறுபான்மையினரின் நலனுக்காக 2500 கோடி மட்டும் செலவிடுவது நகைப்பிற்குரியதே.

2011ல் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டிற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்காக மட்டும் 170 கோடி ரூபாயில் சீரமைக்கபடுகிறதாம்.

சத்துணவில் வழங்கப் படும் முட்டைக்காக மட்டும் தமிழக அரசால் 2ஆயிரத்து 800 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மாநில அரசு முட்டைக்காக 2800 கோடிகளை செலவிடும் போது, விளையாட்டிற்காக பல கோடிகளை செலவிடும் போது இந்தியாவிலுள்ள ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த 2500 கோடிகளை செலவிடுவதால் எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை. இது கண் துடைப்பு நாடகமே.

இத்திட்டம் காங்கிரஸ் அரசின் சாதனைப்பட்டியலில் இடம் பெறுமே ஒழிய சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இதனால் கடுகளவும் பயனில்லை என்பது தான் உண்மை.

நன்றி : உணர்வு

Thursday, October 8, 2009

மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?


மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.



மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.

மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது. (திருக்குர்ஆன் 2:219)

மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி : உணர்வு

மாவீரனுக்கு விடுதலை!


காலில் கிடக்கும் ஒரு செருப்பு கூட ஒரு சாம்ராஜ்யத்தை தகர்க்கும் ஆயுதம் என நிருபித்து, ஜார்ஜ் புஷ்ஷின் பிரியாவிடை பரிசாக செருப்படி கொடுத்த முன்தாதிர் ஜெய்தி கடந்த வாரம் விடுதலை பெற்றுள்ளார். அவருக்கு 15 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அவருக்கு மாறுகால் மாறு கை வாங்கப் பட்டுவிட்டது என்றும் வந்த வதந்திகளுக்கு மத்தியில் அவ்வீரன் விடுதலை பெற்றுள்ளான். அவர் போலீஸ் மற்றும் ராணுவத்தால் கடுமையான துன்புறுத்தலுக்குள்ளானார் என்று செய்திகள் வெளியானாலும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் நேரிலும் இலட்சக்கணக்கான மக்கள் இதயத்தாலும் அவரை வரவேற்ற போது பட்ட துயரங்கள் எதுவும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திடவில்லை என்பதை உணர முடிந்தது.


யார் என்ன சொன்னாலும் நான் செய்தது சரியானதே! என்னால் முடிந்ததை நான் செய்தேன், ஈராக்கில் கணவனையும் குழந்தைகளையும் இழந்து தவிக்கும் தாய்மார்களின் பிரதிபலிப்பை தான் நான் எதிரொலித்தேன்' உடைந்த பல்லுகளுடன் வெளிவந்த முன்தாதிர் ஜெய்தி கூறிய வாக்குகள் இவை. அவருடைய பற்கள் உடைந்திருக்கலாம், ஆனால் ஜார்ஜ் புஷ்ஷோ என்றென்றைக்கும் தலைநிமிர முடியாத அளவிற்கு அவமானத்தை பெற்றுக்கொண்டாரல்லவா அதற்கு முன் இது சாதாரணமே! ஏனென்றால் தன்னால் இயலவில்லையே என ஏங்கும் உலக மக்களின் முன்னால் இன்று இவர் ஒரு ஹீரோ.

நான் ஆவேசத்தால் அதை செய்துவிடவில்லை. உலக மனச்சாட்சிக்கு முன்னால் நான் வைத்த கேள்விகள் அவை. இன்று ஈராக் சின்னாபின்ன மாக்கப்பட்டு விட்டது. சதாம் உசேன் காலத்தில் இந்நாடு இவ்வாறு இருக்கவில்லை. கடுமையான யுத்த குற்றங்கள் நடக்கின்றன. 2007 கணக்கின் படி 12 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவும் கூட்டு நாடுகளும் உலக அனுமதியுடன் நடத்திய வேட்டையில் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அப்பாவிகள் குரூரமாக கொல்லப்படுகின்றனர். உலக நாகரீகத்தின் முன்னோடியாக திகழ்ந்த ஈராக் இன்று ஒரு சவக்கிடங்கு. ஈராக் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானும் அப்படித்தான். அமெரிக்காவுக்கு 40 நாடுகளில் 865 இராணுவ தளங்கள் எதற்காக? 46 நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் வெவ்வேறு காரணங்களைக் கூறி நுழைந்திருப்பது எதற்காக? வருடந்தோறும் இருபத்தைந்தாயிரம் கோடி டாலர் செலவு செய்து பூமி முழுவதும் இராணுவத்தை அனுப்புவது எதற்காக? முன்தாதிர் விடை தேடும் கேள்விகள் இவை.

ஆயுத வியாபாரமும் இனவெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட இந்த சிறுபான்மையினர் உலகையே அடக்கிஆளும் போது அவற்றை எதிர்ப்பது முன்தாதிர் ஜெய்தி எறிந்தது போன்ற ஷூக்கள் மட்டுமே. அவருக்கு இருந்த துணிச்சல் மற்றும் தைரியத்தில் பத்திலொரு பங்கேனும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இன்று இவ்வுலகு இரத்தக்காடாக மாறியிராது. அனுபவம் ஆட்சியாளர்களை திருத்த வேண்டும். இல்லையேல் அக்கிரமமே கோலோச்சும்.

நன்றி : உணர்வு

Tuesday, October 6, 2009

இந்திய அமைதிக்கு குந்தகம் செய்யும் அமெரிக்கா

மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை சொல்லும் போது அது உண்மை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது கோயபல்ஸ் தத்துவம் எனப்படும். இந்த தத்துவத்தை பயன்படுத்தி ஈராக்கை அபகரித்த அமெரிக்கா தற்போது அதே தத்துவத்தை இந்தியாவிலும் புகுத்தி வருகிறது.


ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என ஆரம்பத்தில் அமெரிக்கா கூறிய போது அதை உலகம் அலட்சியம் செய்தது. ஏனெனில் பொருளாதார தடை விதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு நல்ல போர் விமானம் கூட இல்லாத ஒரு நாட்டில் அணு ஆயுதமோ இராசாயன ஆயுதங்களோ எவ்வாறு இருக்க முடியும் என்பது தான் அதற்கு காரணம். ஆனால் அங்கு இரசாயன ஆயுதம் இருக்கிறது என்று திரும்ப திரும்ப அமெரிக்கா கூறிய போது உலக நாடுகளுக்கிடையில் இருக்குமோ என்ற ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா அங்கு அணு ஆயுதம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. பின் அதிலிருந்து மக்களை காப்பதாக கபட நாடகம் ஆடி அந்நாட்டை சின்னாபின்னமாக்கி வருகின்றது.

அதுபோலவே தற்போது இந்தியாவை ஒரு தீவிரவாத நாடு எனக் கூறுவதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டுகிறது. இந்திய நாட்டின் ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க இருப்பதாக கதை கட்டி அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்துவது போல் இந்தியாவை அவமானப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று கூட அமெரிக்க வெளியுறவுத்துறை வேண்டுகோள் வைத்தது.

தற்போது இந்தியாவில் ரமலான், தசரா, தீபாவளி போன்ற தொடர்;ச்சியான பண்டிகைகள் வந்து கொண்டிருப்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அதனால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு பயங்கரவாதியும் பண்டிகை காலங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால் உலக பயங்கரவாதியான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தான் முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது எவ்வித காரணமுமின்றி சதாம் உசேனை தூக்கிலிட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்.

அடுத்ததாக, அமெரிக்கா திரும்ப திரும்ப நம் நாட்டை தீவிரவாத நாடாகவே அறிவித்துக் கொண்டிருக்க நம்மவர்களோ மௌனிகளாகவே இருக்கின்றனர். கோயபல்ஸ் தத்துவத்தை மீண்டும் மீண்டும் கூறி தன்னுடைய கருத்தை அமெரிக்கா உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது அதற்கு நாம் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆட்சிபீடம் அமெரிக்க நிழலாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளும் சமுதாய ஆர்வலர்களும் அமெரிக்காவின் இந்த போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டும். இல்லையேல் பொய்க்காரணங்களைக் கூறி நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தனது இராணுவத்தை ஊடுருவச்செய்துள்ள அமெரிக்கா, பாதுகாப்பு எனும் பெயரில் இந்தியாவிற்குள்ளும்; நுழைய முயற்சி செய்யும். இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கலாகாது.

நன்றி : உணர்வு