Thursday, October 29, 2009

சனதன் சாஸ்தா அமைப்பு தடை செய்யப்படுமா?

மாலேகான் மற்றும் இந்தியாவின் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்பான 'சனதன் சனஸ்தா' என்ற அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தேசிய பாதுகாப்பு படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கார்கரே தெரிவித்திருந்தார். ஆனால் மெஜாரிட்டி மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ அதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என பயந்த அரசு அதை தடை செய்யாமல் மௌனம் காத்தது. அதன் பயனாக நாம் ஓர் உண்மை அதிகாரியான கார்கரேயை இழந்துவிட்டோம். அவரது இழப்பிற்கு பின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி இருப்பதை கடந்த வாரம் கோவாவில் நடந்த குண்டுவெடிப்பு காண்பிக்கின்றது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்காக 'சனதன் சனஸ்தா' எனும் இந்துத்துவ அமைப்பு திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் படி அவ்வமைப்பை சேர்ந்த மெஸ் குண்டாபட்டீஸ், யோகேஷ்நாயக் என்பவர்கள் மக்கள் அதிகமாக கூடும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் திட்டத்துடன் கோவா மாநிலத்தில் மர்ம கோவா எனும் நகருக்கு வந்து நரகாசுரனின் கொடும்பாவி எரிக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை இவர்கள் பொருத்திக் கொண்டிருக்கும் பொழுது பயங்கர சத்தத்துடன் அந்த வெடிகுண்டுகள் வெடித்தன. வெடிகுண்டுகளை வைத்த சனதன் சனஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சார்ந்த அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதை கடந்த வார உணர்விலும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

மாலேகான் குண்டு வெடிப்பு உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற பிரக்யா சிங் எனும் தீவிரவாதிப்பெண் சாமியார் நிர்வாகியாக இருக்கும் அமைப்பு தான் இந்த சனதன் சனஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பு. இவளது ஆதரவாளர்கள் தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து நகரில் வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்ட போது நகரின் மூன்று பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த பயங்கர வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் ஏராளமானோர் பலியாகி இருப்பர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் சனதன் சனஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை போலீஸார் கண்டறிந்தவுடன் உடனடியாக மர்ம கோவா நகரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பான்டா எனும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த இயக்கத்தின் ஆசிரமத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 30 அறைகளை சோதனை செய்த போது குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அங்கிருப்பது தெரியவந்தது. வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் கருவிகள், மின்சார சாதனங்கள், டைமர் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியதுடன் ஆசிரமத்தில் இருந்து குண்டு வெடிப்பில் தொடர்புடைய சுரேஷ் சந்தீப் ஷிண்டே வீரேந்திரா ஆகியோர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் சுரேஷ் என்பவர் குண்டு வெடிப்பில் பலியான யோகேஷ் நாயக்கின் சகோதரன் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ஆசிரமத்தில் 167 வெளிநாட்டினர் தங்கி இருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னும் அரசு இன்னும் ஏன் மௌனம் காக்கின்றது. அது தடை செய்யப்பட வேண்டும். அந்த அமைப்புகள் எங்கெல்லாம் பரவியிருக்கின்றதோ அவற்றையெல்லாம் கண்டெறிந்து துடைத்தெறிய வேண்டும். அத்துடன் ஜாமீனுக்கு அப்பீல் செய்துள்ள தீவிரவாத சன்னியாசிப் பெண் பிரக்யாசிங்கையும் அவளது கூட்டாளிகளையும் ஜாமீனில் வெளிவராத வகையில் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் சனதன் சாஸ்தா அமைப்பை தடை செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக மஹாராஷ்டிரா டி.ஜி.பி விர்க் தெரிவித்துள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும் கூட அதை ஆறப்போடாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதனால் பயங்கரவாதிகள் தங்கள் திட்டங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதையும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மறைத்து வைப்பதையும் தடுக்க முடியும். இல்லையெனில் தலையை விட்டு வாலை பிடித்த கதையாகி போகும். அதை அரசு உணர்வது நல்லது.

அமெரிக்காவின் மறைமுக தாக்குதல், மாவோஸ்டுகளின் வெறிச்செயல், இந்தத்துவ தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகள் போன்றவற்றை அரசு பொடுபோக்காக கருதாமல் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதன்றி பயங்கரவாதத்தை வேரறுக்க கைகோர்ப்போம் என்ற வெற்று முழக்கத்தால் பயனேதுமில்லை.

நன்றி : உணர்வு

Wednesday, October 28, 2009

உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக...




தொலைக்காட்சிக்கு கட்டுப்பாடுகள் வேண்டுமென்று உலகெங்கிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஏனெனில் சினிமாவுக்கு தணிக்கைத்துறை இருப்பது போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்ய தனியாக துறை எதுவும் அரசால் ஏற்படுத்தப் படவில்லை. (தமிழக தணிக்கை துறை செயலிழந்து போயிருப்பது தனி விஷயம்) அதன் காரணமாக நிகழ்ச்சிகளுக்கு மெருகேற்றவும் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் தருகிறோம் எனும் பெயரிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. தனிநபர் தாக்குதல், நகைச்சுவை எனும் பெயரில் தன்மானத்துக்கு பங்கம் விளைவித்தல் போன்றவற்றோடு ஆபாசங்களை திணித்தல் ஆகியவை கட்டுப்பாடின்றி அரங்கேறி வருகின்றன. சினிமா, அரைகுறை ஆடையுடன் கூடிய பாடல்கள், வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாசக் காட்சிகளை அரங்கேற்றி வரும் தொலைக்காட்சிகள் அதைவிட மோசமாக என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றன.


இந்தியா போன்ற கட்டுப்பாடற்ற நாடுகளில் எதுவும் செய்ய இயலாமல் போனாலும் இதை அடியோடு ஒழித்துக் கட்ட சவுதி அரேபியா அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

லெபனான் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் எல்.பி.சி (டு.டீ.ஊ) தொலைக்காட்சியில் 'போல்டு ரெட் லைன்' என்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. திருமணத்திற்கு முன் பின் செய்யும் அந்தரங்க செயல்களை பகிரங்கப்படுத்துவது தான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதில் கலந்து கொண்ட மாசின் அப்துல் ஜவாத் எனும் சவுதி அரேபியாவைச் சார்ந்த இளைஞன், தான் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறான், எத்தனை பெண்களை கற்பழித்திருக்கிறான், எத்தனை பெண்களை விபச்சாரம் செய்திருக்கிறான் என்பதை பகிரங்கப்படுத்தியதைக் கண்டு அரபுலகமே அதிர்ச்சியுற்றது. பெண்களை எப்படி தன் வலையில் வீழ்த்துவது என்பதையும் அந்த நிகழ்ச்சியில் அவன் சொல்கிறானாம். நண்பர்களின் துணையுடன் அவன் செய்த செயல்களையெல்லாம் கேட்டு அரபுலகம் கொதித்தெழுந்தது.

சவுதி அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்து மாசின் அப்துல் ஜவாத் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த கொடிய செயலுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் முடிவு கட்டும் வகையில் மாசினுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் 1000 சாட்டையடியும் விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியது. அவனது இரண்டு நண்பர்களுக்கும் தலா இரண்டு வருடங்கள் சிறையும் 300 சாட்டையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புகள் அரபுலகு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த இளைஞன் தனது குடும்பத்தை சார்ந்த பெண்களுடனும் திருமண ஆசை கூறியும் தான் ஏமாற்றியுள்ளான். இதை ஒரு பாடமாகக் கொண்டு அந்நிய ஆண்களிடத்தில் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டுமென்றும் பெற்றோர் தங்கள் பெண்களை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டுமென்றும் அரபிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்ததாக சவுதி அரசு, தவறு செய்த இளைஞனுக்கு மட்டும் தண்டனை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த நிகழ்ச்சியை தொகுத்தவர் முதல் காமிராமேன் வரை அனைவருக்கும் தண்டனை வழங்கியது சிறப்பாக கருதப்படுகிறது. சமுதாயத்தை சீரழித்து ஒழுக்கக்கேட்டை புகுத்தும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சவுதி பெண்ணான, நிகழ்ச்சியின் கோ-ஆர்டினேட்டர் ரோஸானா அல்யாமி என்பவருக்கு, வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகவில்லை. மாசின் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்த பிறகே ரோஸானா ஆஜரானார். அப்போது அப்பெண்ணுக்கு 60 சாட்டையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் நீண்ட விசாரணைக்கு பின் ஜித்தா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் காமராமேனுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரையறை வேண்டும். யாரும் எதையும் செய்து விடலாம், சொல்லி விடலாம் எனும் போங்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ள ஒரு வியாதியாகும். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் அல்லது வன்முறையை உருவாக்கும் செய்திகளை அல்லது நிகழ்ச்சிகளை கண்டிக்கும் போது அதை பத்திரிகை சுதந்திரம் எனக் கூறி அதை நியாயப்படுத்துபவருக்கு சவுதி அரேபியா சரியான பாடம் கற்பித்துள்ளது. இந்த தீர்ப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் தொலைக்காட்சிகளை ஆளும் அரசுகள் கட்டுக்குள் கொண்டுவருமானால் வன்முறையும் ஆபாசமும் விலகி சமுதாயம் சீர் பெறும்.

ed;wp : czh;T

Sunday, October 25, 2009

நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!

ஷப்னம் ஹாஷ்மிபாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா?

... ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா, பனஸ்கந்தா ஆகிய இடங்களிலிருந்தா?

இங்கிருந்து அழைப்பவர்கள் தொண்ணூறு விழுக்காட்டினர் முஸ்லிம்கள்! மூன்று நாட்களுக்குமுன் அமெரிக்காவில் இருந்து காலை 2 மணிக்கு அழைப்பு, அழைத்தவர் ஒரு முஸ்லிம்; இன்று கராச்சியிலிருந்து, நேற்று காஷ்மீரிலிருந்து.

உங்கள் மின்மடல்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன!

ஆட்வாணி, வாஜ்பேயியைக் கேலியாகப் பேசுகிறீர்களா?

மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்கிறீர்களா?

உங்கள் புத்தக அலமாரியில் அரபி, உருது புத்தகங்கள் இருக்கின்றனவா?

உருது புத்தகம் கவிதைப்புத்தகமா? நம்ப முடியாது! கவிதை வடிவில் ஒரு பயங்கரவாதச் செயலுக்கான திட்டம் நிச்சயம் இருக்கும்!

அருகிலிருக்கும் புத்தகத்தில் ஹிட்லர் பெயர் அடிக்கோடிடப்பட்டுள்ளதே! என்ன சொன்னீர்கள்? மோடி ஹிட்லருக்கு ஒப்பானவரா? நிச்சயம் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்!

என்னது? உங்களிடம் கோத்ரா சம்பவம் குறித்த ஆவணங்கள் உள்ளனவா? அதுகுறித்த இவ்வளவு வீடியோ போட்டோக்கள் உங்களிடம் எதற்கு? மோடியின் பெயரைக் களங்கப்படுத்தும் சதி தானே இது? ஐஎஸ்ஐ யுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கும் சாத்தியம் உள்ளது.

இதென்ன மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூர் வரைபடங்கள்? எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் எனத் திட்டம் தீட்டத் தானே?

நாள் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்தவாரம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எதற்கா? வேறு எதற்கு? வழியில் உங்களை விடுவித்ததாகச் சொல்லி நீங்கள் நகரும் போது என்கவுண்டரில் போட்டுத் தள்ளத்தான்!

உங்களிடமிருந்து கைப்பற்றப் படப்போகும் ஆதாரங்களைப் பற்றிக் கேள்வி வேண்டாம். உங்கள் கைகளிலும் பைகளிலும் எங்கள் இருப்பில் இதற்காகவே சேர்த்து வைத்திருக்கும் நிறைய வெடிபொருள்களையும் ஏகே47 ரக துப்பாக்கிகளையும் நாங்களே திணித்து விடுவோம். பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னதாகவே தகவல் சொல்லி விடுவோம். அடுத்த நாள் முழுக்க நீங்கள்தான் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தெரிவீர்கள் - பிணமாகத்தான், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்!

தலைப்பு என்னவா? தயார் செய்துவிட்டோம்!

கொடிய பெண் தீவிரவாதி என்கவுண்டரில் கொலை!

ஃஃஃஃஃஃஃ

இன்னும் என்ன தயக்கம் நீதிமான்களே, காவலர்களே?

என்னிடம் உருது நூல்கள் நிறைய உள்ளன;

எனக்கு அமெரிக்காவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் முஸ்லிம்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன;

நான் படித்தவள்; இருகுழந்தைகளின் தாய்; ஓர் அறிவியலாரின் மனைவி; நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! என்னிடம் உருது நூல்கள் உள்ளன;

இந்தியாவின் முக்கிய நகரங்களின் வரைபடங்கள் உள்ளன!

வேறென்ன வேண்டும் பொதுமக்களைக் காக்கும் கடமை தவறாக் காவலரே!

வா, வந்து என்னைச் சுட்டுக் கொல்!

-ஷப்னம் ஹாஷ்மி

நன்றி : சத்தியமார்க்கம்.காம்

கோவா குண்டு வெடிப்பு : மத வெறியாட்டம்!

இந்திய சுதந்தர தினமானாலும் சரி, குடியரசு தினமானாலும் சரி, அல்லது இந்துக்களின் எந்த பண்டிகைகளானாலும் சரி, கொண்டாட்டத்தைக் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி; குண்டு வைக்க முயற்சி என்று பத்திரிகை - தொலைக்காட்சிகளில் கூறி ஊடகவியலாளர்கள் தங்களை அரிப்பை தணித்துக் கொள்வர்; அதே போல, காவல்துறையும் தமது பங்கிற்கு சோதனைகள் என்ற பெயரில் பொய்யான பதட்டத்தை உருவாக்குவர்; இதனையெல்லாம் கேள்விப்படுகின்ற - பார்க்கின்ற பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சியை உருவாக்குவதே இதன் நோக்கம்.

தீபாவளியை முன்னிட்டு குண்டு வைத்து அந்தப்பழியை முஸ்லிகளின் மேல் போடுவதற்காக, இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவில், கடந்த 16.10.1009 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒரு ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை எடுத்து வரும்போது, தவறுதலாக வெடித்து, ஒருவன் மெல்குந்தா பாடீல், இறந்து விட்டான்; மற்றொருவன் யோகேஷ் நாயக், பலமான காயங்களுடன் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இவர்கள் இருவரும் மாலேகன் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சத்வி ப்ரக்யா சிங் தாகூருக்கு மிக நெருக்கமானவர்கள். இந்த ஸ்கூட்டருக்குச் சொந்தக்காரன் வேறு யாருமில்லை; நிஷாத் பகாலே என்ற இந்துத்வ தீவிரவாதி; சனாதன் சவுன்ஸ்தா என்ற இந்துத்வ தீவிரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர்,. இந்த அமைப்பு, கோவாவில், பொண்டா என்ற பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

சனநெரிசலுள்ள மார்கோ பகுதியில், கிரேஸ் சர்ச்சுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா இடர்னோ ஸ்கூட்டரில் தான் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு, நரகாசுரனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்த பகுதி தான் இது. தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, இந்து மக்கள் மீது குண்டுகள் வைத்து தாக்குதல் நடத்தி, பழியை முஸ்லிம்கள் மேல் போடுவதற்காக செய்த சதிதான் இது என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.

கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவிக்கையில், இந்துத்வ தீவிரவாத அமைப்பு சனாதன் சவுன்ஸ்தா வின் தொடர்பை உறுதிப்படுத்தினார். மேலும், அவ்வமைப்பின் தலைமையத்தில் சோதனை செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்துடைப்பாக விசாரணையை நடத்தாமல், இதில் ஈடுபட்ட இந்த அமைப்பினரும், இதற்கு தூண்டுகோலாக இருந்த மற்ற தீவிரவாத இந்துத்வ அமைபினரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்துத்வவாதிகளின் இந்த இழிசெயலை நடுநிலை இந்து சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரும் பணியும் நமக்கு உள்ளது. இவற்றைக் கண்டாவது, கமல்ஹாசன் போன்ற அறிவிஜீவிகள் (?) தங்களது கருத்தை மாற்றிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : உணர்வு

Thursday, October 15, 2009

திரைத்துறையினரின் தொடர் தீவிரவாதம் - தூங்கும் சென்சார் துறை!


இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவரையும் தீர்த்துக்கட்டும் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் அதன் வெற்றியை தொடர்ந்து அதே பார்முலாவில் இன்னொரு படத்தையும் தந்துள்ளார். வழக்கமாக அர்ஜூன் அல்லது விஜய்காந்த் நடிக்கும் படங்கள் தான். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் அந்த ஃபார்முலாவை இப்போது கமலஹாசன் கையில் எடுத்துள்ளார்.



படத்தில் வரும் காட்சிகள் சில...


அப்துல்லாஹ் - அல்காயிதாவின் டைரக்ட் காண்டாக்ட். 42 இடங்களில் டிரையினிங் காம்ப் நடத்தி தீவிரவாதிகளுக்கு ஜிஹாத் பயிற்சி கொடுத்தவன். அதில் 20 காம்ப் இந்தியாவில் உள்ளது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அவனிடம் டிரையினிங் ஆகி இருக்காங்க. எல்லோரும் 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.


அஹமதுல்லாஹ் - இவன் தாலிபான். கந்தகாரில் பயிற்சி பெற்றவன். அப்துல்லாவின் வலது கை. ஹமாஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் குரூப்புடன் இவனுக்கு கனெக்ஷன் உண்டு. லஷ்கர் இ தய்யிபா டெர்ரரிஸ்டின் மாஸ்டர் மைண்ட்டான முஸம்மிலுக்கு இவன் வெரி குளோஸ்.

இனாயதுல்லாஹ் - ஜமாஅத்து தவா வின் ஏரியா டெபுடி கமாண்டர். லஷ்கர் இ தய்யிபாவின் பொலிடிக்கல் விங்க். சாப்ட்வேர் எஞ்சினியர். படத்துக்குள்ளே தகவலை ஒளித்து வைப்பதில் இவன் கில்லாடி. பல டெர்ரரிஸ்ட் அமைப்பின் வெப்சைட்டிற்கு இவன் தான் டிசைனர்.

கரம்சந்த்லாலா - இந்து. ஏ.கே.47, ஆர்.டி.எக்ஸ் போன்ற எதுவாக இருந்தாலும் காசு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் சப்ளை செய்வான்.

கமல்ஹாசன் பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு கமிஷனர் மோகன்லாலை மிரட்டி சிறையிலிருக்கும் இந்த நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறார். இவர்களில் இருவர் கோவையில் வெடிகுண்டு தாக்;குதல் நடத்தியதற்காக கமிஷனரால் கைது செய்யப்பட்டவர்கள்.


இந்த படம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது கோவை கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதால் கைது செய்யப்பட்டது போலவும் குஜராத் கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் அதன் காரணத்தால் தீவிரவாதியாகி இந்துக்களை கொல்ல குண்டு வைத்ததாகவும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். ஹமாஸ், லக்ஷர் தெய்பா, ஜம்அத்தே தவா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று போலீஸ் அதிகாரி கூறுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணை மீட்க போராடிவரும் ஹமாஸ் என்ற ஜனநாயக அமைப்பையும் இந்தப் படம் தீவிரவாதிகள் லிஸ்டில் சேர்த்துள்ளது.


இந்த 4 தீவிரவாதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் நகரத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் என கமல் மிரட்டுவதால் அதன் காரணமாக அவர்களை விடுவிக்க போலீஸ் ஒத்துக் கொள்கின்றது. அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்க கொண்டு செல்லும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் முஸ்லிம். பெயர் ஆரிப்.


நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆரிப் இருந்தாலும் அவரையும் கண்காணிக்கும் படி கமிஷனர் சொல்லி அனுப்புகிறார். மொத்தத்தில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று இந்த சினிமா சொல்கிறது. அந்த தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆரிபை நக்கலடிப்பது போலவும் ஆரிபை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வது போலவும் காண்பிக்க படுகின்றது.


இந்த நான்கு தீவிரவாதிகளில் முஸ்லிமான மூன்று பேரும் அப்பாவி மக்களை கொல்பவர்கள். ஆனால் இந்துவான கரம் சந்தோ யாரையும் கொல்வதில்லை. காசுக்காக ஆர்.டி.எக்ஸ் சப்ளை பண்ணுபவன், அவ்வளவு தான். தவறுக்கு வருந்துபவன், ஆனால் முஸ்லிம்களோ காபிர்களை கொல்ல வேண்டுமென்று துடிப்பவர்கள் போல் காட்சிகள் இருக்கின்றன.


இந்த நால்வரையும் விடுவித்த கமல் அவர்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது போல் ஜீப்பில் ஏறச் சொல்ல அதில் கமல்ஹாசனால் வைக்கப்பட்ட வெடிகுண்டின் மூலமாக அந்த நால்வரும் சாகின்றனர். இது தான் கதை.


முஸ்லிம் தீவிரவாதிகளை போலீஸ்காரர்கள் கூட விட்டுவிடுகின்றனர். எனவே அவர்களை நாமே கொல்வது சிறந்தது என்கிறார் கமல். ஏற்கனவே கமலை அடையாளம் காட்டியவர் கூட கமல் செய்தது சரி எனக்கருதி அவரை அடையாளம் சொல்ல மறுக்கிறார். அவர் இருக்கும் இடத்தை கம்பியூட்டர் மூலம் கண்டுபிடிக்கும் ஒரு ஐ.டி மாணவன், கமலை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியாக கமல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கமிஷனர் மோகன்லால் கூட கமல்தான் குண்டு வைத்தவர் என்பதை அறிந்தும் அவரைப் போக செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு இந்துத்துவ வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சென்சார் போர்டு எவ்வாறு அனுமதித்தது என நமக்கு புரியவில்லை. இந்த படம் சென்சார் போர்டுக்கு செல்லாமல் வந்திருக்க வேண்டும், அல்லது லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது அங்கும் காவிசிந்தனை ஊடுருவி இருக்க வேண்டும்.


இதை சமீபத்திய கோர்ட் தீர்ப்பு உண்மைபடுத்துகின்றது. வக்கீல்களை மோசமாக சித்தரித்ததாக கூறி விஜய் மற்றும் சிவகாசி பட தயாரிப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.


வக்கீல்களை மோசமாக சித்தரிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களுக்கு எந்த கட்டப்பாடும் கிடையாது, தாங்கள் விரும்பியதை திரையிடலாம் எனக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் தணிக்கை துறையையும் சாடியுள்ளார்.

சென்சார் போர்டு செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், தணிக்கை துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்சார் போர்டு ஒப்புக்கு செயல்படுகிறது, உண்மையாக செயல்படவில்லை என்ற கருத்துக்கு உறுப்பினர்கள் இடம் கொடுக்கக் கூடாது. சமூக நலன் கருதி ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.


சினிமாவில் மற்றவர்களை அவதூறாக, மோசமாக மற்றும் ஆபாசமாக சித்தரிக்காமல் இருக்கும்படி செய்வதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவதூறான காட்சிகளை பொழுதுபோக்கு எனும் பெயரில் எடுக்கக்கூடாது. தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஒரு சமுதாயத்தின் மீது அவதூறு கூறுவதை எவ்வாறு தணிக்கை துறை அனுமதித்தது. இலங்கையில் பயங்கரவாதம் செய்தும் இந்தியாவில் ராஜீவ் காந்தியை கொலையும் செய்த விடுதலை புலிகள் எனும் தீவிரவாதிகளை காண்பித்திருந்தாலும் ஏற்றிருக்கலாம். அவர்கள் இந்துக்கள் என்பதால் கமல் அவர்களை விட்டுவிட்டாரா?


மாலேகான் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் புரோகித் உட்பட உள்ளவர்களை தீவிரவாதியாக காண்பித்து இருந்தாலும் இது உண்மை எனக் கூறலாம். தீவிரவாதிகள் அபினவ் பாரத், ஆர்,எஸ்,எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்றதாக கூறினாலும் அது உண்மையானது. ஆனால் முற்றிலும் அதை மூடி மறைத்துவிட்டு இந்து தீவிரவாதிகள் செய்த செயல்களையெல்லாம் முஸ்லிம்கள் செய்ததாக காண்பித்திருக்கிறார்கள்.


இதை திரையாக்கியவனின் கையை ஒடித்து அல்லது திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் சென்று திரையை கிழித்து தியேட்டரை தரைமட்டமாக்கினால் இனி எவனும் இது போன்ற திரைப்படத்தை எடுக்கமாட்டான். போட்ட பணம் கூட வராது என்ற நிலையில் அது தடுக்கப்படும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற சங்பரிவாரின் செயல்.


ஆனால் முஸ்லிம்கள் அதை செய்யமாட்டார்கள் எனும் தைரியத்தில் தான் இவ்வாறு சினிமா எடுக்கப்படுகின்றது. அதுவும் அவர்கள் மீது அவதூறி கூறி. அராஜகம் செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் மௌனமாக இருக்கின்றனர். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்த படம் தடைசெய்யப்பட வேண்டும்.


அத்துடன் இதற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களை நேரடியாக தாக்குவதையும் வன்முறையை ஊக்குவிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்கலாகாது. முஸ்லிம்களும் நடுநிலைவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அதற்கு முன்வர வேண்டும்.

நன்றி : உணர்வு

Monday, October 12, 2009

யானைப்பசிக்கு சோளப்பொறி !

இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்காக 2500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறதென மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்திர பிரதேசம் பரூக்காபாத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் நலனில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் இதை செயல்படுத்த தன்னார்வ தொண்டர்களை அரசு நியமிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்த ராஜேந்திர சச்சார், ஆய்வின் முடிவில் மற்ற அனைத்து சமூகத்தினரையும் விட முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் குடியிருப்பதற்கு வீடுகளின்றி ரோட்டோரங்களில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டது அனைவருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிலையை அவ்வபோது சுட்டிக்காட்டி 'பார்த்தீர்களா நமது நிலையை' என்று ஒவ்வொரு முஸ்லிம் அமைப்புகளும் பேசியும் எழுதியும் போராடியும் தான் வருகின்றனவே தவிர தீர்வுகள் கிடைத்த பாடில்லை.

நோன்பு நேரத்தில் இப்தார் விருந்துக்கு அரசியல்வாதிகளை அழைத்த சில முஸ்லிம் பிரமுகர்கள், ரம்ஜான் பண்டிகைக்கும் இலவச வேட்டி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களே தவிர சமுதாய முன்னேற்றத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்து போட முன்வரவில்லை.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எனும் பெயரில் செல்வந்தர்களின் கடனைக்கூட தள்ளுபடி செய்து கோடிக்கணக்கான ரூபாயை செலவிடும் அரசின் செவிகளில் முஸ்லிம்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம், வட்டியில்லா கடன் வழங்குங்கள் என்று முழங்கியபோதும் அரசு செவிசாய்க்கவில்லை.

முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற திட்டங்கள் வகுக்கப்படும் என தேர்தல் நேரங்களில் அளித்த வாக்குறுதியை கண்டு கொள்ளாமல் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, 'பாம்பும் சாக வேண்டும், தடியும் முறிந்துவிடக் கூடாது' எனும் ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்தது போலவும் வெளியே தெரிய வேண்டும், ஆனால் அவர்கள் பயன்பெற்றுவிடவும் கூடாது என்பது போல இந்த திட்டத்தை அரசு அறிவித்தள்ளதாக முஸ்லிம்களிடத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த 2500 கோடி ரூபாய் என்பது ஊழியர்களை அமர்த்தி விநியோகித்தால் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட இந்த பணம் போதாது என்பது அரசுக்கே தெரியுமாதலால் தான் அதற்கு ஊழியர்களைக் கூட நியமிக்காமல் தன்னார்வ தொண்டர்கள் மூலம் அத்திட்டத்தை செயல்படுத்துகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் கூறுவதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஏனெனில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் 90 மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு இந்த 2500 கோடி ரூபாய் பயன்படப் போகிறதாம். இதனால் உத்தர பிரதேசிலுள்ள 21 மாவட்டங்கள் வளர்ச்சி பெறுமென்றும் 15 சதவிகித சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டுமென்று சல்மான் வலியுறுத்தியுள்ளாராம். இதனால் உபியில் இன்னும் 15 மாவட்டங்கள் பயன்பெறுமாம். உபியில் மட்டும் 30 மாவட்டங்கள் பயன்பெறுமாம். அப்படியானால் மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் 60 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து உதவி தொகை வழங்குவார்கள் போலும். சல்மான் குர்ஷித் உபியின் சிறுபான்மை அமைச்சரா அல்லது மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரா என நமக்கு விளங்கவில்லை. சல்மானின் கணக்குபடி உபி யின் 30 மாவட்டங்கள் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு மாவட்டங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. (நமது வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அவர்கள் முதல்வரின் நண்பர் ஆதலாலும் அவர் கூறி நமக்கு இடஒதுக்கீடு கிடைத்தது போல!? அவர் கூறினால் முதல்வர் உடனடியாக கேட்பார் என்பதாலும் மத்திய அரசு வழங்கும் இத்திட்டத்தினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பயன்பெற வாய்ப்புண்டு!?).

அத்துடன் இந்த உதவித் தொகை முஸ்லிம்களுக்கு மட்டும் என ஒதுக்கப்படவில்லை. மாறாக சிறுபான்மையினரின் முன்னேற்றம் என்றே ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் என வரும்போது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என இன்னும் ஏராளமானோர் இடம் பெறுவர். அந்த வகையில் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறாமல் போகாது.

90 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதானால் மொத்தத்தில் மூன்று மாநிலங்களுக்கு மேல் பயன்பெற முடியாது. அதிலும் பல லட்சம் சிறுபான்மையினரை கொண்டுள்ள மாவட்டங்களில் சில கோடி ரூபாயைக் கொண்டு எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்திட முடியாது.

மாயாவதியின் சிலையை மாநிலம் முழுவதும் நிறுவுவதற்காக பல்லாயிரம் கோடி அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் சிரமப்படும் சிறுபான்மையினரின் நலனுக்காக 2500 கோடி மட்டும் செலவிடுவது நகைப்பிற்குரியதே.

2011ல் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டிற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்காக மட்டும் 170 கோடி ரூபாயில் சீரமைக்கபடுகிறதாம்.

சத்துணவில் வழங்கப் படும் முட்டைக்காக மட்டும் தமிழக அரசால் 2ஆயிரத்து 800 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மாநில அரசு முட்டைக்காக 2800 கோடிகளை செலவிடும் போது, விளையாட்டிற்காக பல கோடிகளை செலவிடும் போது இந்தியாவிலுள்ள ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த 2500 கோடிகளை செலவிடுவதால் எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை. இது கண் துடைப்பு நாடகமே.

இத்திட்டம் காங்கிரஸ் அரசின் சாதனைப்பட்டியலில் இடம் பெறுமே ஒழிய சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இதனால் கடுகளவும் பயனில்லை என்பது தான் உண்மை.

நன்றி : உணர்வு

Thursday, October 8, 2009

மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?


மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.



மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.

மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது. (திருக்குர்ஆன் 2:219)

மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி : உணர்வு

மாவீரனுக்கு விடுதலை!


காலில் கிடக்கும் ஒரு செருப்பு கூட ஒரு சாம்ராஜ்யத்தை தகர்க்கும் ஆயுதம் என நிருபித்து, ஜார்ஜ் புஷ்ஷின் பிரியாவிடை பரிசாக செருப்படி கொடுத்த முன்தாதிர் ஜெய்தி கடந்த வாரம் விடுதலை பெற்றுள்ளார். அவருக்கு 15 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அவருக்கு மாறுகால் மாறு கை வாங்கப் பட்டுவிட்டது என்றும் வந்த வதந்திகளுக்கு மத்தியில் அவ்வீரன் விடுதலை பெற்றுள்ளான். அவர் போலீஸ் மற்றும் ராணுவத்தால் கடுமையான துன்புறுத்தலுக்குள்ளானார் என்று செய்திகள் வெளியானாலும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் நேரிலும் இலட்சக்கணக்கான மக்கள் இதயத்தாலும் அவரை வரவேற்ற போது பட்ட துயரங்கள் எதுவும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திடவில்லை என்பதை உணர முடிந்தது.


யார் என்ன சொன்னாலும் நான் செய்தது சரியானதே! என்னால் முடிந்ததை நான் செய்தேன், ஈராக்கில் கணவனையும் குழந்தைகளையும் இழந்து தவிக்கும் தாய்மார்களின் பிரதிபலிப்பை தான் நான் எதிரொலித்தேன்' உடைந்த பல்லுகளுடன் வெளிவந்த முன்தாதிர் ஜெய்தி கூறிய வாக்குகள் இவை. அவருடைய பற்கள் உடைந்திருக்கலாம், ஆனால் ஜார்ஜ் புஷ்ஷோ என்றென்றைக்கும் தலைநிமிர முடியாத அளவிற்கு அவமானத்தை பெற்றுக்கொண்டாரல்லவா அதற்கு முன் இது சாதாரணமே! ஏனென்றால் தன்னால் இயலவில்லையே என ஏங்கும் உலக மக்களின் முன்னால் இன்று இவர் ஒரு ஹீரோ.

நான் ஆவேசத்தால் அதை செய்துவிடவில்லை. உலக மனச்சாட்சிக்கு முன்னால் நான் வைத்த கேள்விகள் அவை. இன்று ஈராக் சின்னாபின்ன மாக்கப்பட்டு விட்டது. சதாம் உசேன் காலத்தில் இந்நாடு இவ்வாறு இருக்கவில்லை. கடுமையான யுத்த குற்றங்கள் நடக்கின்றன. 2007 கணக்கின் படி 12 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவும் கூட்டு நாடுகளும் உலக அனுமதியுடன் நடத்திய வேட்டையில் பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அப்பாவிகள் குரூரமாக கொல்லப்படுகின்றனர். உலக நாகரீகத்தின் முன்னோடியாக திகழ்ந்த ஈராக் இன்று ஒரு சவக்கிடங்கு. ஈராக் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானும் அப்படித்தான். அமெரிக்காவுக்கு 40 நாடுகளில் 865 இராணுவ தளங்கள் எதற்காக? 46 நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் வெவ்வேறு காரணங்களைக் கூறி நுழைந்திருப்பது எதற்காக? வருடந்தோறும் இருபத்தைந்தாயிரம் கோடி டாலர் செலவு செய்து பூமி முழுவதும் இராணுவத்தை அனுப்புவது எதற்காக? முன்தாதிர் விடை தேடும் கேள்விகள் இவை.

ஆயுத வியாபாரமும் இனவெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட இந்த சிறுபான்மையினர் உலகையே அடக்கிஆளும் போது அவற்றை எதிர்ப்பது முன்தாதிர் ஜெய்தி எறிந்தது போன்ற ஷூக்கள் மட்டுமே. அவருக்கு இருந்த துணிச்சல் மற்றும் தைரியத்தில் பத்திலொரு பங்கேனும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இன்று இவ்வுலகு இரத்தக்காடாக மாறியிராது. அனுபவம் ஆட்சியாளர்களை திருத்த வேண்டும். இல்லையேல் அக்கிரமமே கோலோச்சும்.

நன்றி : உணர்வு

Tuesday, October 6, 2009

இந்திய அமைதிக்கு குந்தகம் செய்யும் அமெரிக்கா

மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை சொல்லும் போது அது உண்மை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது கோயபல்ஸ் தத்துவம் எனப்படும். இந்த தத்துவத்தை பயன்படுத்தி ஈராக்கை அபகரித்த அமெரிக்கா தற்போது அதே தத்துவத்தை இந்தியாவிலும் புகுத்தி வருகிறது.


ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என ஆரம்பத்தில் அமெரிக்கா கூறிய போது அதை உலகம் அலட்சியம் செய்தது. ஏனெனில் பொருளாதார தடை விதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு நல்ல போர் விமானம் கூட இல்லாத ஒரு நாட்டில் அணு ஆயுதமோ இராசாயன ஆயுதங்களோ எவ்வாறு இருக்க முடியும் என்பது தான் அதற்கு காரணம். ஆனால் அங்கு இரசாயன ஆயுதம் இருக்கிறது என்று திரும்ப திரும்ப அமெரிக்கா கூறிய போது உலக நாடுகளுக்கிடையில் இருக்குமோ என்ற ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா அங்கு அணு ஆயுதம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. பின் அதிலிருந்து மக்களை காப்பதாக கபட நாடகம் ஆடி அந்நாட்டை சின்னாபின்னமாக்கி வருகின்றது.

அதுபோலவே தற்போது இந்தியாவை ஒரு தீவிரவாத நாடு எனக் கூறுவதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டுகிறது. இந்திய நாட்டின் ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க இருப்பதாக கதை கட்டி அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்துவது போல் இந்தியாவை அவமானப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று கூட அமெரிக்க வெளியுறவுத்துறை வேண்டுகோள் வைத்தது.

தற்போது இந்தியாவில் ரமலான், தசரா, தீபாவளி போன்ற தொடர்;ச்சியான பண்டிகைகள் வந்து கொண்டிருப்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் அதனால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு பயங்கரவாதியும் பண்டிகை காலங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. ஆனால் உலக பயங்கரவாதியான அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தான் முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது எவ்வித காரணமுமின்றி சதாம் உசேனை தூக்கிலிட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்.

அடுத்ததாக, அமெரிக்கா திரும்ப திரும்ப நம் நாட்டை தீவிரவாத நாடாகவே அறிவித்துக் கொண்டிருக்க நம்மவர்களோ மௌனிகளாகவே இருக்கின்றனர். கோயபல்ஸ் தத்துவத்தை மீண்டும் மீண்டும் கூறி தன்னுடைய கருத்தை அமெரிக்கா உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது அதற்கு நாம் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆட்சிபீடம் அமெரிக்க நிழலாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளும் சமுதாய ஆர்வலர்களும் அமெரிக்காவின் இந்த போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டும். இல்லையேல் பொய்க்காரணங்களைக் கூறி நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தனது இராணுவத்தை ஊடுருவச்செய்துள்ள அமெரிக்கா, பாதுகாப்பு எனும் பெயரில் இந்தியாவிற்குள்ளும்; நுழைய முயற்சி செய்யும். இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கலாகாது.

நன்றி : உணர்வு

Sunday, October 4, 2009

சீனாவில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சி!

உலகெங்கிலும் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. இதை தடுக்க அல்லது கட்டுக்குள் கொண்டு வர மேற்குலக ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூற, அது உண்மையாகிவிடும் எனும் கோயபல்ஸ் தத்துவத்தை போன்று இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக அவதூறு பிரச்சாரங்களை செய்தும் வருகின்றது. அதையும் மீறி இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் கொள்கையாக ஏற்பவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவும் அவை தயங்குவதில்லை. இந்த பாணியில் மேற்குலகம் செயல்பட, சீனா இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. சீனாவில் இஸ்லாம் வெகு வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் இதை ஜீரணிக்க இயலாத சீன அரசு முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்து விட்டுள்ளது.

சிங்கியாங்கின் தலைநகரான உரும்கியில் முஸ்லிம்கள் 90 சதவீதம் வசித்து வந்தனர். ஆனால் சீன அரசு திட்டமிட்டு அங்கு ஹன்சீனர்களை குடியமர்த்தியது. அங்கு நான்கில் மூன்று பங்கு சீனர்களை அவ்வாறு குடியமர்த்தி ஹன்சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரத்தை ஏற்படுத்தியது. கலவரத்திலும் கலவரத்திற்கு பின்னரும் முஸ்லிம்களே பாதிக்கப்பட்டனர். பாதிப்படைந்த முஸ்லிம்கள் ஜனநாயக முறையில் போராடினாலும்; அரசால் அடக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் தடை செய்யப்பட்டனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மாகணங்களில் அரசு வலுக்கட்டாயமாக சீனர்களை திணித்ததால் 41 சதவிகித ஹன்சீனர்கள் அவ்விடங்களில் குடியேற்றப்பட்டு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இவ்வாறு சீனா, முஸ்லிம்களிடத்தில் கடும் போக்கை கடைபிடித்து வந்தது. அதன் காரணமாக அன்றாட அலுவலுக்கு தடை ஏற்படுமளவிற்கு அங்கு புரட்சி ஏற்பட்டுள்ளது. அதை அடக்கும் எண்ணத்துடன் இஸ்லாமியர்களுக்குள் கடும் கட்டுப்பாட்டை சீன அரசு விதைத்தாலும் அது கட்டுக்கடங்காமல் போவது ஒருபுறமிருக்க, மறுபுறமோ சீனர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற வண்ணமிருக்கின்றனர்.

சீனாவில் மட்டுமின்றி சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா வருபவர்களும் வேலை நிமித்தம் வருவபர்களும் இஸ்லாத்தை படித்தவுடன் அதில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சீனர்களின் இந்த இஸ்லாமிய வரவு சவுதி அரேபியாவில் மிகவும் அதிகரித்துள்ளதாக சவுதி அரேபிய பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. மினா, அரஃபா, முஸ்தலிஃபா வுக்கிடையேயான ரயில்வே திட்டத்தை ஏற்று செயல்படுத்திவரும் சீனக்கம்பெனியின் மேலாளர் உட்பட 17 பேர் கடந்த வாரம் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பு இதே குழுவை சார்ந்த 660 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனப்பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அங்கு இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டதாலும் சீன அரசு முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதாலும் சவுதி அரேபியாவுக்கு வரும் சீனர்கள் இஸ்லாத்தின் யதார்த்த நிலையை புரிந்தவுடன் அதை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு சீனாவை விட்டு வெளிவரும் சீனர்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்பது சீன அரசுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா இஸ்லாமிய மயமாகி வருகின்றது என போப் ஆண்டவர் ஒருபுறம் கவலையோடு கூற, இன்னொரு புறம் ஆசிய நாடுகளும் இஸ்லாமிய மயமாவது சீனா போன்ற ஆதிக்க ஆட்சியாளர்களை பொறுத்தவரை ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை.

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை இது உண்மைப்படுத்துகிறது.

நன்றி : உணர்வு

திரை கூத்தாடிகளின் பார்வையில் திருமணம்!

'எள்ளு காயுறது எண்ணெய்க்கு, எலிப்புளுக்கை எதுக்கு காயுது' என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல திருமணத்தை பற்றி குடும்ப அங்கத்தினர் கருத்து சொன்னாலும் விமர்சனம் செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திருமணம் என்பது என்ன? ஒழுக்கமான குடும்பம் என்பது என்ன? என்று தெரியாத சினிமா கூத்தாடிகள் இன்று திருமணத்தை பற்றி பேசுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

திருமணங்கள் தோல்வியில் முடிகின்றனவாம். எனவே திருமணங்கள் தேவையில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு கமலஹாசன் பேட்டியளித்துள்ளார். அவருக்கு திருமணம் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அல்லது அவரைப்போன்ற திரைக்குடும்பத்தினருக்கு மட்டும் அதை சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் பொது தொலைக்காட்சியில் கூற அவருக்கு எந்த தகுதியுமில்லை. ஆனால் இதற்கு பதில் கூறியுள்ளார் இன்னொரு கூத்தாடியான மனோரமா. திருமணம் என்பது தேவை. திருமணம் செய்யாமலிருந்தால் கமலுக்கு ஸ்ருதி கிடைத்திருப்பாரா? எனக்கு பூபதி கிடைத்திருப்பானா? என்றெல்லாம் மனோரமா அறிவுபூர்வமான(!?) கேள்வியை கேட்டுள்ளார். திருமணம் செய்யாமலும் குழந்தை பெற முடியும் என்று இவருக்கு தெரியவில்லையோ! விருப்பம் போல நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஹோட்டல்களில் தங்கும் போது என் மகளிடம் உனது தாய் யார் என்றும் என்னிடம் உனது மனைவி யார் என்றும் கேட்டதால் தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளேன். அதன்றி எனது மகளுக்கும் சரிகாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கமல் கூறியதற்கும் மனோரமாவின் பதிலிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாற்றமெடுக்கும் சாக்கடையை கிளறி நம் கையையும் நாறடித்துவிடாமல் விஷயத்திற்கு வருவோம்.

மனோரமாவின் இந்த பதிலால் எவருக்கும் லாப நஷ்டங்கள் இல்லை. ஆனால் சந்தடி சாக்கில் அவர் இன்னொரு கருத்தையும் விதைக்கப் பார்க்கிறார். திருமணத்திற்கு முன் மணமக்கள் தாங்கள் குழந்தை பேறுபெறும் தகுதியுடையவர்கள் தானா என்று மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டுமாம். அத்துடன் மணமகன் இல்லறத்தில் ஈடுபடும் தகுதி பெற்றவன் தானா என்பது பற்றியும் சான்றிதழ் பெற வேண்டுமாம். அதை சட்டமாக்க முயற்சி செய்ய போகிறாராம். அதற்கு அவர் கூறும் காரணத்தை கேட்டு நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. குழந்தையின்மை தான் பெரும்பாலான விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றனவாம். அத்துடன் ஆண்மை குறைவு, எயிட்ஸ் போன்ற காரணங்களினால் பெண்கள் பிற ஆண்களிடம் தொடர்பு கொள்கிறார்களாம். கணவர்கள் கொலை செய்யப்படவும் இதுதான் காரணமாம்.

அவரது கூற்றுப்படி ஆணோ பெண்ணோ மருத்துவரிடம் போலி சான்றிதழ் வாங்கி வந்தால் மனோரமாவின் பதிலென்ன?

மனோரமாவின் குற்றச்சாட்டுப்படி தனது மகனுக்கு திருமணம் நடப்பதற்காக ஆண்மை குறைவை மறைக்கும் பெற்றோர் இதை செய்ய மாட்டார்களா?

திருமணத்திற்கு பின் ஏற்படும் தவறான தொடர்பால் எயிட்ஸ் வந்தால் அதற்கு மனோரமாவின் பதில் என்ன?

கணவனால் அல்லது மனைவியால் குழந்தை பெற முடியவில்லையாயின் அவர்கள் விவாகரத்து செய்வதில் என்ன தவறு இருக்க போகிறது. ஆரம்பத்தில் குழந்தையில்லாத தம்பதிகள் 10 வருடங்களுக்கு பின் குழந்தை பாக்கியம் பெறவில்லையா? அடுத்ததாக இல்லற வாழ்க்கைக்கு தகுதியுள்ளவர்கள் தானா என்பதை திருமணத்திற்கு முன்பே ஒரு டிரையல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னாலும் சொல்வார்கள் போல் தெரிகிறது.

மகளும் தந்தையும் தங்கையும் தனயனும் குளியலறை மற்றும் படுக்கையறை காட்சிகளில் கட்டிப்புரண்டு எவ்வித வெட்கமின்றி வேறுபாடுமின்றி கூச்சமின்றி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆபாசத்தை விதைப்பது தான் சினிமா. மருமகனான தனுஷ் ஆடிப்பாடி சல்லாபம் செய்த ஸ்ரேயா என்ற நடிகையுடன் அவரது மாமனாரான ரஜினி அடுத்த படத்தில் காம களியாட்டம் போடுகிறார். ஆபாச சந்தையின் புதிய வரவான கமலுடைய மகள் ஸ்ருதி, என்னுடைய தந்தையுடன் நான் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம். இது தான் சினிமா. இவர்கள் தங்களுடைய சதை வியாபாரத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போவதால் யாருக்கும் தொந்தரவில்லை. ஆனால் திருமணம் போன்ற குடும்ப விவகாரங்களில் ஈடுபடும்போது தான் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றது.

நாளொரு நங்கையும் பொழுதொரு மங்கையுமாய் இருந்து விட்டு குழந்தைக்காக மட்டும் திருமணம் செய்யும் திரைக்குடும்பத்தினரை போல மனோரமா மற்றவர்களையும் கருதிவிட்டார் போலும். திருமணம் என்பது குழந்தை பேறு, தாம்பத்தியம் மட்டுமல்ல, அதனுடன் அன்பு, நட்பு, ஆதரவு, பாதுகாப்பு என இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் காசுக்காக அன்பு செலுத்தும் நடிகர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.

கமலாக இருந்தாலும் மனோரமாவாக இருந்தாலும் தான் வாழ்வது நிழல் வாழ்க்கை என்பதை உணர்ந்து நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து கொண்டு பேசுவது அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் நல்லது.

ஒரு பெண்ணுக்கு மருத்துவம் செய்தும் தனது கணவனால் தனக்கு குழந்தை பாக்கியம் தர முடியாது எனில் அவள் தாராளமாக வேறு திருமணம் செய்வதை இஸ்லாம் அனுமதித்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொதுவானது எனக் கூறும் இஸ்லாம், தனிமனித ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது. பிற மதங்கள் கொசுக்களை விரட்டும் பொழுது இஸ்லாம் சாக்கடையையே அகற்ற சொல்கிறது. அதாவது விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று சொல்கிறது. எயிட்ஸை ஒழிக்க இதைவிட ஒரு தீர்வு உண்டா?

முற்போக்குவாதி என்று தன்னைக் கூறிக் கொண்டு கற்காலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் கமலும் குழந்தை பெறும் இயந்திரமாக பெண்களை கருதும் மனோரமாவும் இஸ்லாத்தை சற்று படிப்பார்களானால் இஸ்லாத்தில் அனைத்திற்கும் தீர்வு உண்டு என்பதை புரிந்து கொள்வார்கள்.

நன்றி : உணர்வு