Saturday, February 21, 2009

இஸ்லாம் என்றால் பாம்புக்கடி?!#$% (பாதி)


"இரண்டு காதில்லாதவள் ஒரு காதில்லாதவளைக் கேலி செய்தாளாம்" என நாட்டுப்புறத்தில் வேடிக்கையான பழமொழி ஒன்று உண்டு. விளக்கம் கூற வேண்டிய அளவிற்கு இல்லாமல் நேரடியாகப் புரியும் விதத்தில் அமைந்தப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. தன் முதுகில் வண்டி வண்டியாக அழுக்கை வைத்துக் கொண்டு, தவறிப் போய் சேற்றில் விழுந்தவனைப் பார்த்து நகைப்பவனைக் கேலி செய்யும் விதத்தில் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவர்.

"இரண்டு காதும் இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைக் கேலி செய்தாலே இப்படி எனில், இரண்டு காதுமே உள்ளவளைப் பார்த்து இரண்டு காதும் இரண்டு காலும் இரண்டு கையும் இல்லாதவள் கேலி செய்தால் எப்படி இருக்கும்?. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை! அவ்வாறு நடந்தாலோ? அவ்வாறு கேலி செய்பவளை முட்டாள் வர்க்கத்தில் கூட சேர்க்க இயலாது.

இப்படிப்பட்ட வர்க்கத்திற்கு நடைமுறை உதாரணமாக இங்கே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், இறைவனால் தூதராக அனுப்பப்பட்டவரையும் கடவுளாக்கி அவரின் அன்னையையும் கடவுளாக்கி, அவருக்கு இறைவனிடமிருந்து செய்தி கொணர்ந்தவரையும் கடவுளாக்கி.... இப்படி கடவுளுக்கு ஒரு இலக்கணமே இல்லாமல் செய்து விட்டு, அதே கடவுளின் பெயரால் "சிலுவை யுத்தம்" முதல் "கிறுக்கன் ஜார்ஜ் புஷின் பைத்தியக்காரத்தனம்" வரை செய்து உலகில் இரத்த ஆறுகளை ஓட்டிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பெயரில் அலையும் கூட்டம் தான் அது.

சிந்திப்பவனை முட்டாளாக்கியும் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்பவனைச் சாத்தானாக்கியும் "அற்புத வியாதியளிக்கும் கூட்டங்கள்" நடத்தும் இந்தக் காமடியன் ரோலில் திரியும் போர் வெறியர்களின் பரம்பரையினர், தங்களிடம் இருக்கும் அழுக்கை அப்படியே ட்ராயரில் மறைத்து விட்டு "இறைவனால் அருளப்பட்ட அமைதி மார்க்கத்திற்குப் புதிய வியாக்கியானங்கள்" வழங்க வந்துள்ளனர்.

அதாவது இஸ்லாம் என்றால் அதன் பொருள் பாம்புக்கடி

சிரிப்பு வருபவர்கள் ஒரே மூச்சாக சிரித்துவிடவேண்டாம். இந்தக் கட்டுரையின் கடைசிவரையில் சிரிக்க வேண்டிய பல (பாம்புக்) கடிகள் உள்ளன!

இஸ்லாம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் சொல்லவந்த இன்னொரு கிறிஸ்தவரின் உளறல்தான் இந்தக் கட்டுரை எழுதக் காரணம்.

அவர் தனது அரபு புலமையை மேற்கோள்காட்டி இஸ்லாம் என்றால் பாம்புகடி என்ற ஒரு பொருள் இருக்கின்றது என்று உளறிக் கொட்டியுள்ளார். முதலில் தனது மதத்தையோ அதன் பெயரையோ பொருளையோ எண்ணிப் பார்த்திருப்பாரேயானால் இப்படி இஸ்லாம் பற்றி கூற வந்திருக்கமாட்டார்.

ஒரு மனிதன் தான் உருவாக்கிய பொருளை ஒரு பெயர் குறிப்பிட்டு அதன் வினையையும் குறிப்பிட்டிருக்கும்போது அவைகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று பார்த்தல் அவசியம். பூட்டு என்றால் பூட்டுவதற்கு உபயோகப்படும் ஒரு பொருளாக அது அமையவேண்டும். பூட்டு என்பதற்குப் பதிலாக வளைந்த மரக்கொம்பு ஒன்றை யாராவது விற்பனை செய்தால் அதை எந்த அறிவுடையவர்களாவது வாங்கிச்செல்வார்களா?. ஆம், கிறிஸ்தவ புரோகிதர்கள் விற்பனை செய்வது இதைத்தான். ஓட்டை விழுந்த வார்த்தைகளின் தொகுப்புகளை வேதம் என்று வாதம் செய்து விற்று வருகின்றார்கள். ஒரு கடவுள் இருக்க வேண்டிய இடத்தில் கடவுளுக்கு மூன்று ஆள்த்துவங்ளைக் கொடுத்து அந்தக் கடவுள் செய்ய வேண்டியதைக் கூட செய்யவிடாமல் தாமே ஒரு கூண்டுக்குள் நின்று மக்களின் பாவங்களை மன்னிக்கின்றோம் என்று கும்பசாரம் செய்வார்கள். இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் வண்ணம் படைத்தவனை விடுத்து படைப்பினங்களை வணங்குவது பாவச்செயல் என்று நல்லுபதேசம் செய்து கடவுளின் அதிகாரத்தில் தலையிடுபவர்களைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழிகாட்டுதலாக இஸ்லாம் மார்க்கம் விளங்கி வருகின்றது. ஆம்! இந்த வாழ்க்கை தத்துவத்தைப் படைத்த இறைவன் அதற்கு இஸ்லாம் - அமைதி என்ற ஒரு பெயரையும் வழங்கினான். அந்தப் பெயருக்கொப்ப அதன் வழிமுறைகளையும் அமைத்தான். மரணத்திற்குப்பின் அந்த மனிதன் செல்லும் இடத்தைத் துல்லியமாகச் சொல்லியும் தந்திருக்கின்றான். இந்த இஸ்லாம்; பெயராலும் வினையாலும் விளைவாலும் ஒரேயொரு தெளிவான கருப்பொருளுடன் மேலோங்கி நிற்பதை உலகம் நன்கறியும்.

இப்படித் தனித்து விளங்கும் இஸ்லாம் உலகில் காணப்படும் அத்தனை கொள்கைகளையும் தோற்கடித்து மண்ணைக் கவ்வச் செய்கின்றது. எனவே உலக ஆதாயத்திற்காக மக்களை ஏமாற்றும் எல்லா மத புரோகிதர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இஸ்லாம் விளங்கும்போது கிறிஸ்தவர்கள் மட்டும் இஸ்லாமை அதிகமாக விமர்சிப்பது ஏன்? என்ற பொதுவான கேள்விக்குச் சிலர் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். அதாவது வேதம் கொடுக்கப்பட்டோர் வரிசையில் கிறிஸ்தவர்களுடைய வேதத்திற்கும் முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனுக்கும் தொடர்பு உண்டு என்றும்; அதனால்தான் இப்படி விமர்சனம் நடைபெறுகின்றது என்ற எண்ணம்தான் அது. இது தவறான வாதமாகும். உண்மை காரணம் என்னவென்றால் உலகில் உள்ள எல்லா மதங்களும் எதாவதொரு காரணத்திற்காக இஸ்லாத்தை விமர்சிப்பார்களானால் அவர்களில் கிறிஸ்தவர்கள் விமர்சிப்பது பணம் என்ற பேராசைக்காக மட்டுமே. எப்படிச் சொல்கின்றோம் என்றால் இப்போது நீங்கள் உபயோகிக்கும் கம்ப்யுட்டரிலிருந்து காகிதத் துண்டு வரை மேலை நாடுகள் தயாரிக்கும் அத்தனை பொருட்களிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட வரி இந்தக் கிறிஸ்தவ பொய்பரப்பிகளுக்கென்று ஒதுக்கப்படுகின்றது.

இப்படி வருவாய் கிடைப்பதை விடாமல் பிடிப்பதற்காக முஸ்லிம்களைச் சீண்டி எழுதிக்கொண்டே இருப்பார்கள். அதில் ஒன்றுதான் இஸ்லாம் என்றால் பாம்புகடி என்று புலம்பியிருப்பது.

முன்னொரு காலத்தில் பூமி உருண்டை என்று கலீலியோ சொன்ன போது அது பைபிளுக்கு எதிரானது என்று அன்றைய கிறிஸ்தவ மத புரோகிதக் கூட்டம் அவருக்குத் தண்டனை வழங்கியது. இன்றும் அதே பைபிள்தான் இவர்களது ஆதாரங்களும்.

சூரியனில் பனி மழை பெய்கின்றது என்று ஒருவர் கூறினால் என்ன நினைப்போம்? அதையே என் இரண்டு கண்ணால் பார்த்தேன் என்று இன்னொருவர் கூறினால் அதை எப்படி கருதுவோம்? அந்த வகையிலான பிதற்றல்களை முன்வைத்து வாங்கும் நன்றிக்காக எதையாவது உளறிக் கொட்டவேண்டும் என்று ஆராய்ச்சி செய்து, கொண்டு வந்ததுதான் இஸ்லாம் என்றால் பாம்புக்கடி.

இஸ்லாமை எதிர்க்க எதையேனும் எழுதித் தள்ள வேண்டும் என்ற அடங்காத வெறியில் இவர் புளுகி வைத்த வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் விதத்தில் வைக்கப்பட்ட பதில்களைப் பற்றி மூச்சு விடாமல் திரும்பத் திரும்ப தன் சிறுபிள்ளைத் தனமான கட்டுரைகளை(உளறல்களை) இணையத்தில் பரப்பி வருகின்றார்.

இவரது உளறல்களைப் பார்ப்போம்.

//இந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அறிஞர்கள், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு, அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்//

அந்தக் காலத்தில் செய்திருந்த சாதாரண-அசாதாரண முயற்சிகள்? . வாளால் பரப்பப்பட்டது. வெட்கமற்றவர்கள். ஒன்று, தங்களிடம் இருக்கும் உண்மையைப் பிறருக்குச் சொல்லி உபதேசம் செய்ய முடியாதவர்கள் ஆடு, மாடு, கோழிகளை வைத்து ஆண்டவனுக்கு ஆள் சேர்ப்பார்கள். பிற மதத்தவர்களைக் கருத்துக்களால் வெல்ல முடியாமல் வரும்போது இப்படி கை நீட்டி தாக்குதல் நடத்துவதற்குச் சமமாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுவது. என்ன ஆனது? ஆயுதத்தால் இஸ்லாம் பரவியது என்று கூறிய பொய்யர்களின் நெஞ்சிலிருந்தே தோன்றுகின்றார்கள் முஸ்லிம்கள். அவர்களை மிரட்டியது யார்? அவர்களை எத்தனை காலம் முஸ்லிம்களாக மிரட்டி தக்க வைக்க முடியும்? என்பன போன்ற சாதாரண மக்களுடைய சிந்தனையில் இவர்களது குப்பைக் கூழங்கள் எரிந்து சாம்பலாகியது.

இப்போது புதிய அசாதாரண முயற்சியை மேற்கொண்டு வருகிறார்களாம்!?

இப்போது என்றல்ல! எப்பொதுமே இஸ்லாத்திற்கு நல்ல பெயர் வாங்கித் தர ஒருவர் கூட இல்லாமல் போனாலும் அதன் மகிமையை அதன் தூய்மையை நிலை நிறுத்துவது இறைவனின் கடமை. அது நடந்தே தீரும். ஆரம்பத்தில் எப்படி இஸ்லாம் மார்க்கத்தை பிறரிடம் கொண்டு செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதோ அதே ஆன்மீக முறையில் கொண்டு சென்றால் போதுமானது. அதை விடுத்து புதிய ஆன்மீக வழிமுறைகளைக் கையாளத் தேவையில்லை.

அதை நிரூபிக்கும் வண்ணமாக இன்று உலகில் முஸ்லிம்களின் நேரடியான அழைப்பு இல்லாமல் தானாகக் கற்றுக்கொண்டு இஸ்லாத்தை ஏற்று களமிறங்கியவர்களே சாட்சியாக இருக்கின்றார்கள்.

ஆரம்ப காலங்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த இஸ்லாத்தைச் சொல்லித் தந்த போது அவர்கள் தனியொரு ஆளாகத்தான் நின்றிருந்தார்கள். அது விதையாக செடியாக மலராக தோட்டமாக வியாபித்து இன்று கடல் கடந்து அந்த முஹம்மது நபியவர்களின் கால்படாத இடங்களிலெல்லாம் காலடி வைத்திருக்கின்றது! இது நடைபெற்றது வாளாலோ அல்லது ஆடு, மாடு, கோழிகளைக் காண்பித்தோ அல்ல. எதிரியையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் அதன் தூய்மையும் பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்று சொல்லித்தராத அதன் நேர்மையும்தான் காரணம்.

சுருங்கச் சொன்னால் இறைவன் தன் திருமறையில்...

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்பவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தமது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான். (9:32)

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். (6:125)

எனவே அடுத்தவர்களின் உதவிகளுக்காக காத்திருக்க வேண்டியத் தேவை ஆண்டவனுக்கு இல்லை.

//அவர்கள் புதியதாக விற்கப் பார்க்கும் ஒரு சித்தாந்தம் என்னவென்றால்//

ஏற்கனவே பழையதைச் சொல்லிச் சொல்லி வாய் புண்ணாகிப் போனவர்கள் புதிய சித்ததாந்தம் என்று புனையல் நடத்துகின்றார்கள். இஸ்லாம் என்பது விற்பனைக்கான ஒன்றல்ல! அதே நேரம் இறைவனின் மார்க்கம் என்று பொய்கூறி கிறிஸ்தவர்களால் விற்கப்படும் சரக்குகளோ, நாம் முன்னர் சுட்டிக்காட்டியது போன்று ஆடு, மாடு கோழிகளுடன் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், வேலை வாய்ப்புகள், பாவமன்னிப்புக்கான பரிகாரங்கள், விஷேஷ ஆராதனை, காலை முதல் மதியம் வரை என்றெல்லாம் வயிற்றுப்பிழைப்புகள் நடத்துவது யார் என்று உலகமே அறிந்து வைத்திருக்கின்றது.

அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் ஏமாற்றும் இவர்கள் சாலையோரம் பிச்சையெடுக்கும் ஆயிரக்கணக்கான குருடர்கள் மீதும் கை, கால்களில்லாமல் முடமாகிப்போனவர்கள் மீதும் ஏன் கரிசனம் காட்டுவதில்லை என்று இன்னொரு முறை கேட்கத்தான் வேண்டுமா? இதுவரை கிழிந்து தொங்கிய இவர்களது போலி வித்தைகளில் இனி கிழிய என்ன இருக்கின்றதாம்?

ஆக, ஆடு மாடு கோழிகளை காண்பித்து இஸ்லாத்திற்கு ஆள் எடுக்கும் தேவை அந்த ஆண்டவனுக்கு இல்லை என்பதை பின்வரும் இறை வசனம் தெளிவாகச் சொல்லித்தரும்.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (2:256)

பொய் பொய் இன்னும் பொய்யை மட்டுமே மூல தனமாகக் கொண்ட இந்த அற்புத சுகமளிப்பவர்களுடைய வேதம் உண்மை விசுவாசியான ஒருவன் விஷம் அருந்தினாலும் சாகமாட்டான் என்று கூறுகின்றதே!

அது பொய்யா உண்மையா?

பொய் என்றால் இன்னுமா அதை கட்டிக் காக்க வேண்டும். உண்மைதான் என்றால், கிறிஸ்தவர்களில் விஷமருந்தும் தைரியமுள்ள சத்திய விசுவாசி ஒருவர் கூட இல்லையா? எதைச் சொன்னாலும் அதலபாதாளத்தில் விழும்படியான பிதற்றல்களையே பதிலாக்க மூச்சிரைக்க ஓடி ஒளியும் அற்புத சுகமளிப்பவர்களைத்தானே கண்டு வருகின்றோம்.

இனிதான் இவர்களது வேடிக்கை ஆரம்பமாகின்றது.

//"இஸ்லாம் (Islam) " என்ற தங்கள் மதத்தின் பெயரின் பொருள் "அமைதி (Peace)" என்றுச் சொல்கிறார்கள். அமைதி என்ற பொருள் தரும் அரபி வார்த்தை "சலாம் (Salam)" என்பதாகும். அவர்கள் தங்கள் புதிய சித்தாந்தத்தை சொல்வதற்கு அடிப்படையாகஅரபி மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே மூல வார்த்தை இருப்பதை காரணம் காட்டுகிறார்கள்.//

இஸ்லாம் என்பதற்கு அமைதி என்ற வார்த்தையை முஸ்லிம்கள் புதிதாகக் காட்டுகின்றார்களாம்! கேக்குறவன் கேணயனா இருந்தால் கேட்டர் பில்லரும் பாட்டுபாடுமாம். அற்பத சுகமளிப்பவர்களே. வெட்கமாயில்லை உங்களுக்கு? இதுவரை இஸ்லாம் என்பதற்கு முஸ்லிம்கள் கொடுத்து வந்த பொருள் எவை, எவை என்று பட்டியலிடவேண்டியதுதானே!

ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது. அதாவது நமது இந்த எழுத்துக்கள் கிறிஸ்தவத்தை நம்பக்கூடிய எண்ணற்ற மக்களிடம் அற்புத சுகமளிக்கின்றோம் என்றெல்லாம் ஏமாற்றும் புரோகிதர்களைத் தோலுரிப்பதற்காகவே. ஆனால் இந்த மதம் விற்று பிழைப்பவர்கள் எழுதுவது என்பது கிறிஸ்தவர்களிடம் தங்கள் நன்மதிப்பைப் பெறுவதற்காகத்தானே தவிர...வேறில்லை என்பதை இவரது நடையில் தெளிவாகத் தெரிகின்றது. அதிலும் அரபு மொழியில் புலமை வாய்ந்தவராக தன்னை காண்பித்து தம்பட்டம் அடித்திருப்பதிலிருந்து தெளிவாகப் புரிந்துவிட்டிருக்கின்றது.

அரபு மொழியில் இவர் ஆட்டம் போட்டிருப்பதைப் பார்த்தால் முருக்கேறிய முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். எந்த அளவுக்கு என்பதை இவர்களைப் போல போகிற போக்கில் சொல்லாமல் தெளிவாக குறிப்பிடுகின்றோம் பாருங்கள்.

//அரபி மொழியை பேசத் தெரியாதவர்களுக்கு, மற்றும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் இப்படிப்பட்ட புதிய சித்தாந்தங்கள் மூலமாகஏமாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, அரபி மொழி தெரிந்தவர்களையும், இஸ்லாமின் போதனை என்ன என்று புரிந்துக் கொண்டவர்களையும் ஒரு போதும் அவர்கள் முட்டாள்களாக்க முடியாது.//

மாட்டுக்கு ஆட்டுக்குட்டி பிறந்தது என்றால் நம்பக்கூடயவர்கள் இருக்கலாம். ஆட்டுக்கு ஆனைக்குட்டி பிறந்தது என்று இவர் சொல்ல வருகின்றார். அதை சாதாரண கிறிஸ்தவ நண்பர்கள் நம்பவேண்டுமாம்.

இஸ்லாமியர்கள் இதுவரை உபயோகிக்காத புதிய சித்தாந்தம் அமைதி என்பதை நாகூசாமல் சொல்லும் இவருக்கு குறைந்தது ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஏன் முகமது நபியவர்கள் இஸ்லாம் என்பதற்கு என்ன பொருளைத் தந்தார்கள் என்று தரவேண்டுமா?

ஆக... தனது ஞான சூனியத்தால் அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் இவருக்கு அரபு ஞானம் உள்ளதா? என்பதை பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேறு எங்கும் செல்லவேண்டிய தேவை இல்லை. இவரது கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள், மற்றும் தலைவர்களின் நூற்களை (அரபு பெயர்களை) எப்படி உச்சரித்திருக்கின்றார் என்பதை பார்த்தாலே இவரது ஆகாசப்புழுகு ஒழுகி வருவதை காணலாம்.

மீதி விரைவில்...இன்ஷா அல்லாஹ்

5 comments:

asd said...

//இந்த இஸ்லாம்; பெயராலும் வினையாலும் விளைவாலும் ஒரேயொரு தெளிவான கருப்பொருளுடன் மேலோங்கி நிற்பதை உலகம் நன்கறியும்//

தெரிந்து கொண்டே கிறிஸ்தவர்கள் நாடகமாடுவதால் அவர்களை ஒருபோதும் திருத்த இயாலாது

Anonymous said...

//மாட்டுக்கு ஆட்டுக்குட்டி பிறந்தது என்றால் நம்பக்கூடயவர்கள் இருக்கலாம். ஆட்டுக்கு ஆனைக்குட்டி பிறந்தது என்று இவர் சொல்ல வருகின்றார். அதை சாதாரண கிறிஸ்தவ நண்பர்கள் நம்பவேண்டுமாம்.//

சரியான உதாரணம்! கலக்கி விட்டீர் அபூநூறா. வாழ்த்துக்கள்

அன்புடன்

அபூஅப்தைனி

Anonymous said...

//கேக்குறவன் கேணயனா இருந்தால் கேட்டர் பில்லரும் பாட்டுபாடுமாம்.//

சிரிப்ப அடக்க முடியல சார்!

---

Asalamsmt said...

மண்டையில் அடிக்கிற விதத்தில் சொல்லியாகி விட்டது இந்த கிருத்துவ மிஷினரிகள் திருந்த மாட்டார்கள். இனி அவர்கள் நடாத்தும் “அற்புத சுகமளிக்கும்” கூட்டத்திற்கே சென்று துண்டு பிரசுரம் பண்ணினால் தான் சரி வரும் என்று நான் நம்புகிறேன். சாதாராணமாக ஒரு கிறுத்துவ குடிமகனை இஸ்லாம் சம்பந்தபட்ட எந்த கூட்ட்த்திற்கும் செல்ல கூடாது, படிக்க கூடாது என்று தடுப்பவர்கள். கழிந்த வருடம் நடந்த பீஸ் - ஜக்கீர் நாயக் கலந்து க்கொண்ட சென்னை மாநாட்டில், ஒரு கிருத்துவர்களும் செல்லக்கூடாது என்று ஃபத்வா போட்டு தடுத்தவர்கள். அதையும் மீறி கிறுத்துவர்கள் கலந்துக்கொண்டார்கள் என்பதும் முக்கிய விஷயம்.

தொடர்ந்து அவர்களுக்கு உங்கள் சாட்டையடி கொடுத்து கொண்டே இருங்கள் சகோதரர் அபூ நூரா அவர்களுக்கு என் வேண்டுக்கோள்

அன்புடன்
அசலம்
asalam2smt@yahoo.com

My Crescent said...

Useful mail. Could be and should be much shorter.
Try to annex an english version in brief.
abdeen