Wednesday, February 11, 2009

போலி உமரும் - உளறல்களும்...(மீதி)


தொன்று தொட்டு இன்று வரை சாமானியர்கள் உட்பட உலகப் பிரபலங்கள் பலரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாகக் ஏற்றுக்கொண்டு வருகின்றார்களே, இவர்களைப்பற்றிய செய்திகளை முஸ்லிம்கள் பிறரிடம் பரிமாறத் தவறுவதில்லை. அதற்காக, இந்தப் பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைவதுதான் இஸ்லாத்தின் ஆதாரமாக யாரும் குறிப்பிடமாட்டார்கள். இந்தப் பிரபலங்கள் முஸ்லிம்களாக மாறாவிட்டாலும் இஸ்லாம்தான் உண்மையான இறை மார்க்கம் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதே அடிப்படைதான் அதிவேக வளர்ச்சியும்! குறிப்பாகச் சொல்வதென்றால் கீழ்கண்ட வசனம் பதில் சொல்லும்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன் 29 : 14)

950 ஆண்டுகாலமாக அதுவும் ஒரு தூதராக இருந்து ஒருவர் பிரச்சாரம் செய்தபோது தனது மனைவியும் மகனும் கூட அந்த தூதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள் என்பதும், பின்னர் மீதமுள்ளவர்கள் அனைவரும் பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டார்கள் என்பதும் குர்ஆனில் உள்ளது. தப்பும் தவறுமாக பைபிளில் கூட உள்ளது.

இந்தச் செய்தியை நம்பக்கூடியவனே முஸ்லிம். இந்தச் செய்தியை மறுக்கக் கூடியவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் வாழக்கூடிய எவரும் இதற்கு முரண்பட்டு சொல்லமாட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தனது திறமையை எடுத்து வைப்பதற்காக இந்தக் கோயபல்ஸ் கிறிஸ்தவர் வைத்த வாதங்கள் வேடிக்கையானது.

ஒன்று மேற்கத்திய உணவு வகையான மெக்டொனால்ட்ஸ் பற்றியும் அதன் தரக்குறைவு பற்றியும் விவரித்திருக்கின்றார். அதை தரமற்ற உணவு என்று ஒப்புதலும் அளித்திருக்கின்றார்.

மதத்தை விமர்சிக்கும்போது உணவை அடையாளம் காட்டும் இவரிடம் அதே தொனியில் நாம் கேட்பவைகளுக்கு பதிலளிப்பாரென்றால் அவர் கேட்ட கேள்விக்கு அவர் விரும்பும் விதத்தில் பதிலளிக்க நம்மால் முடியும்.

மெக்டொனால்டோ, முனியாண்டி விலாஸோ, எங்குபோய் சாப்பிட்டால் பசி அடங்குமோ அல்லது சுவை அதிகமோ அங்கு வாடிக்கையாளர் கூடுவதும் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விற்பனை வாய்ப்புள்ள இடத்தில் கிளை தொடங்குவதும் இயல்பு. இரண்டில் எது சிறந்தது அல்லது சுவையானது என்று ஒப்பிட வேண்டுமென்றால் இரண்டுக்கும் பொதுவான ஒரு பொருளையே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

முணியாண்டி விலாஸ் கோழி சுக்காவுக்கும் புகாரி ஓட்டல் கோழி சுக்காவுக்கும் ஒப்பீடு செய்யலாம். முனியாண்டி விலாஸின் கோழி வறுவலையும் மெக்டொனால்டின் CRISPY CHICKEN ஐயும் ஒப்பீடு செய்தால்கூட ஓரளவு நியாயமுண்டு. இஸ்லாத்தையும் மெக்டொனால்டையும் ஒப்பிட்டிருப்பதை என்னவென்று சொல்வது?

கிளைகளின் எண்ணிக்கையை வைத்து மெக்டொனால்ட் சிறந்தது என்பது நியாயமா என்று கேட்டுள்ளார்!

அதே கேள்வியை சற்று மாற்றி, முனியாண்டி விலாஸுக்குக் குறைவான கிளைகளே இருப்பதால் மெக்டொனால்டை விட சிறந்தது என்பீர்களா? என்று நாமும் கூட கேட்போம்!

சாதாரணமான மக்கள் உட்கொள்ளும் அரிசி கோதுமை சோளம் பருப்பு என்பவைகள் இவர் குறிப்பிட்ட மெக்டொனால்ட்ஸை விட பல கோடி மடங்கு செலவாகி வருகின்றது. இந்த மெக்டொனால்ட்ஸ், கே. எஃப். சி., பெப்ஸி, கோலா போன்ற உதவாத தரமற்ற உணவு? பொருட்களையும் மதுபானங்களையும் உலகில் அதிகமாக உட்கொள்பவர்கள் கிறிஸ்தவர்கள்தான்.

எனவே கேடுகெட்ட உணவகளை உண்ணும் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவமும் தவறானது என்று சொன்னால் அதை இவர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கேடுகெட்ட உணவுகள் உட்கொள்வதில் அதிகம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவம் தவறானது என்று ஒரு முஸ்லிம் எப்படிச் சொல்லமாட்டானோ அது போன்று எண்ணிக்கை அதிகரித்தலை மட்டும் காரணம் காட்டி இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் வாதிடமாட்டான்.

அதுபோன்று வைரஸ்களையும் வரவழைத்திருக்கின்றார்.

பத்தாம் வகுப்பு ஃபெயிலான ஒருவனைப் பார்த்து எட்டாம் வகுப்பு பாஸ் செய்தவன் கிண்டல் செய்த கதையை கேட்டிருக்கின்றோமே!...அது கூட ஜோக்காகத்தான் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்கின்றவர்களின் எண்ணிக்கையை அதிகம் என்று யாரோ குறிப்பிட்டதற்கு இவர் அடுக்கிய வைரஸ் கலைகளை கண்டு சிரிக்கவும் முடியவில்லை. எழுதத் தெரிந்தவராக இருக்கிறார் என்பதால் இவரை மனிதனே இல்லை என்று பிரிக்கவும் முடியவில்லை. அந்த அளவுக்கு இவரது ஒப்புவமை மடமைத்தனமாக வெளிப்பட்டிருக்கின்றது. இதிலும் கூட அதே கேள்விகளை நாம் திருப்பிக் கேட்டால்....

எயிட்ஸ் வேகமாகப் பரவுவதால் எயிட்ஸ் சிறந்ததா? என்ற இவரின் அதிமேதாவித்தனமான கேள்வி கேட்டுவிட்டதாக புழகாங்கிதம் கொள்பவர் இக்கேள்வியின் மூலம்; காலரா, பிளேக், மலேரியா போன்றவை எயிட்ஸைவிடச் சிறந்தது என்று சொல்ல வருகிறாரோ என்னவோ?

உலகில் தற்போது மிகக்கொடிய வைரஸாகக் கருதப்படும் எச்ஐவி யின் பிறப்பிடமும் அதிக அளவில் புழங்கும் உடல்களும் கிறிஸ்தவர்களுடையதே! எனவே கிறிஸ்தவ மதம் பொய்யானது என்று அறிவிக்க முன்வருவாரா?

உலகில் ஆட்கொள்ளி நோயான எய்ட்ஸ் தாக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள் என்பதால் கிறிஸ்தவம் தவறானது என்று ஒரு முஸ்லிம் எப்படிச் சொல்லமாட்டானோ அது போன்று எண்ணிக்கை அதிகரித்தலை மட்டும் காரணம் காட்டி இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் வாதிடமாட்டான்.

மேற்கத்திய கலாச்சாரமும், முதலாளித்தவமும்!

இதில்தான் வேடிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதன் ஆதாரமும் தெளிவாக உள்ளது.

சம்பந்தப்பட்டவர் சுட்டிக்காட்டும் கலாச்சார சீரழிவுகள் இன்று தேவாலயங்களின் உள்ளரங்குவரை சென்றிருக்கின்றது. அது குடும்பத்தை சிதறடித்து இன்று ஒருத்தி நாளை ஒருத்தி என்றும் பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கங்கள் உட்பட முதலாளித்துவம் அனைத்தும் மேற்கத்திய கலாச்சாரம் என்று மாற்றுப் பெயரில் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

தூய அன்னையின் மகனாகப் பிறந்த இயேசுவைப் பின்பற்றுகின்றோம், கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்றோம் என்று கூறுபவர்களுடைய நாட்டிலிருந்து வந்தது என்று சொல்ல வெட்கப்பட்டு மேற்கத்திய கலாச்சாரம் என்று உண்மையை மறைக்கின்றார்.

அந்தப் புனித? கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களுடைய எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களே அதிகம். இந்தக் கலாச்சாரம் மெல்ல இஸ்லாமிய நாடுகளில் பரவி வருகின்றது என்பதும் உண்மை. இதில் என்ன வேடிக்கை என்றால் கிறிஸ்தவம் கிறிஸ்தவம் என்று கூறுபவர்களுடைய நாடுகளிலிருந்து உருவாகி வெளியாகும் ஆடையில்லா கலாச்சாரங்களும் இன்னபிற ஆட்கொல்லி கலாச்சாரங்கள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளில் இந்தப் புண்ணியவான்களால் திணிக்கப்படுகின்றது.

இந்தத் திணித்தல்கள், நாம் எற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அல்லாஹ் என்று கூறும் ஒருவர் கூட இல்லாத நிலை உருவாகும் என்று உலகப் பொதுமறை முன்னெச்சரிக்கை செய்வதும் கூட இஸ்லாமியர்கள் பின்பற்றும் குர்ஆன் எதிர்காலத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றது என்பதை இவர் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

மேற்கத்தியக் கலாச்சாரம் முஸ்லிம் நாடுகளில் பரவி வருவதால் அது இஸ்லாமியக் கலாச்சாரத்தைவிடச் சிறந்தது என்று சொல்லி, இதுவரை MORE IS NOT BETTER என்றவர், இவ்விசயத்தில் MORE IS BETTER என்று முரண்பட்டுள்ளார் அல்லது தனக்குத்தானே வேட்டு வைத்துள்ளார்.

முத்தாய்ப்பாக மூன்று விஷயங்களை குறிப்பிடலாம்.

முஸ்லிம்களின் வளர்ச்சியானது பிற மதங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்பதை தெளிவாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

எந்த வழிமுறைகளைக் கடைபிடித்து இஸ்லாத்தையம் இயேசுவின் வழித்தோன்றலான முஹம்மது நபியையும் பொய்யாக்க நினைக்கின்றார்களோ அங்கெல்லாம் இவர்கள் ஓடி ஒளிவதுதான் தெளிவாக உள்ளது.

தனது உளறல்களின் கடைசிப் பாராவாக முஸ்லிம்களின் வளர்ச்சியைவிட முஸ்லிமல்லாதவர்களின் வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டு அதில் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர் என்று முன்னுக்குப்பின் முரணாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆக எதற்காக என்ன சொல்கின்றோம் என்பது அவருக்கே தெரியாது.
(பணத்துக்காகத்தான் சொல்கின்றோம் என்ற பதில் தேவையில்லை)

மொத்தத்தில் இதுதான் கிறிஸ்தவம்!!!

6 comments:

அதிரை தாருத் தவ்ஹீத் said...

ஆணித்தரமான வாதங்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

மரைக்காயர் said...

//முணியாண்டி விலாஸ் கோழி சுக்காவுக்கும் புகாரி ஓட்டல் கோழி சுக்காவுக்கும் ஒப்பீடு செய்யலாம். முனியாண்டி விலாஸின் கோழி வறுவலையும் மெக்டொனால்டின் CRISPY CHICKEN ஐயும் ஒப்பீடு செய்தால்கூட ஓரளவு நியாயமுண்டு. இஸ்லாத்தையும் மெக்டொனால்டையும் ஒப்பிட்டிருப்பதை என்னவென்று சொல்வது?.//

இஸ்லாத்தை விமர்சனம் செய்ய வருபவர்களில் பெரும்பகுதியினர் இவரைப் போன்ற அரைகுறைகளாகவே இருக்கின்றனர். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

ஷேக் முஹம்மது said...

அல்ஹம்துலில்லாஹ்.

உளறல்களுக்குச் சரியான செருப்படி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Anonymous said...

//மேற்கத்தியக் கலாச்சாரம் முஸ்லிம் நாடுகளில் பரவி வருவதால் அது இஸ்லாமியக் கலாச்சாரத்தைவிடச் சிறந்தது என்று சொல்லி, இதுவரை MORE IS NOT BETTER என்றவர், இவ்விசயத்தில் MORE IS BETTER என்று முரண்பட்டுள்ளார் அல்லது தனக்குத்தானே வேட்டு வைத்துள்ளார்.//

முரண்பாட்டின் மொத்த உருவங்களிடமிருந்து முரண்பாடுகள் மட்டும் தானே வெளிப்படும்?

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிக்க வந்தேறி பார்ப்பனப் பன்னாடைகளால் தோற்றுவிக்கப்பட்ட இரத்தவெறி கொண்டலையும் ஹிந்துத்துவ பிணம்தின்னிகள் இந்திய அளவில் அலைகிறது எனில், சர்வதேச அளவில் சியோனிஸ வெறி மிருகங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு முரண்பட்ட கொள்கைகளுடன் கிறிஸ்தவர்களில் ஒரு கூட்டம் அலைகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், "தாங்கள் கடவுளாக(!)க் கருதும் இயேசுவையே கொலை செய்து விட்டதாக உளறிக் கொட்டும் யூதர்களுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளது தான்".

கருத்து ரீதியாக விவாதிக்க வருபவர்களுடன் கருத்துரீதியாக விவாதிப்பதில் தவறில்லை.

அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வருபவர்களுடன் விவாதிப்பதிலும் தவறில்லை.

ஆனால், முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பவர்கள் தங்களின் கொள்கையைச் சுயப்பரிசோதனை செய்ய வக்கில்லாமல், மற்றவர்கள் மீது சேறு வாரி இறைக்க முனைந்தால்....

உளறல்களுக்குச் செருப்படி மட்டுமே உறைக்கும்.

உங்கள் பணி தொடரட்டும்.

- இறை நேசன்

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

abdul said...

உங்களுடைய பதிவுகள் மிக அருமை, குழப்பவாதிகளுக்கு எதிரான உங்கள் பணி தொடரட்டும். http://abdulali-abdul.blogspot.com/