Sunday, May 3, 2009

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 19

பகுத்தறிவுப் பகலவன் என்று போலி பகுத்தறிவாளர்களால் போற்றப்படும் பெரியாரின் கொள்கையிலும், சிந்தனையிலும் பகுத்தறிவை விட பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பகுத்தறிவு என்ற போர்வையில் வெளிவந்தன. அறிவை விட உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் மக்கள் இதனை சிந்திக்க மறுத்தாலும் உண்மை இதுதான்.

பெரியாரின் சிந்தனைக் குறைவை எடுத்துக் காட்டும் அவரது இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்!

ஆணும் பெண்ணும் இணைந்துதான் மனித சமூகம் உருவாகின்றது. இவ்வாறு இணைவதில் இருவருக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இன்பம் கிடைத்தாலும் இதன் விளைவாக பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

உணர்வு, உரிமை போன்ற விஷயங்களிலும், இன்ன பிற விஷயங்களிலும் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் என்றாலும் உடல் கூறு விஷயத்தில் உள்ள வித்தியாசத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஒருவரை ஒருவர் ஈர்ப'பதனால்தான் இல்லற வாழ்க்கை நடக்கிறது. காலம் செல்லச் செல்ல உடல் உறுப்புகளில் ஏற்படும் தளர்ச்சியின் காரணமாக பெண்களிடம் மட்டும் இந்த ஈர்ப்புத் தன்மை குறைந்து போய் விடுகிறது. அதுவும் ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது மேலும் குறைந்துவிடும்.

பத்து வருடம் இணைந்து வாழ்ந்த தம்பதியர் பிரிந்து விட்டால் ஆணுக்கு உடனே அடுத்த துணை கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு அடுத்த துணை கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.

இதனால்தான் தள்ளாத வயதுக் கிழவரான பெரியாருக்கு இளம் பெண்ணான மணியம்மையை மணந்துகொள்ள முடிந்தது. இந்த வித்தியாசம் இல்லாவிட்டால் மணியம்மை பெரியாரை மணந்திருக்க மாட்டார்.

25 வயதுடையவன் ஈர்ப்பது போல் 40 வயதுடையவனும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக பெண்களை ஈர்க்க முடியும். 25 வயதுப் பெண் ஈர்ப்பது போல் 40 வயதுப் பெண்ணால் ஒரே மாதிரியாக ஆண்களை ஈர்க்க முடியாது. பெரியாருக்கு இது பிடிக்காவிட்டாலும், புரியாவிட்டாலும் இதுதான் உண்மை நிலை.

சினிமாவில் கூட 60 வயது கதாநாயகன் 20 வயது கதாநாயகியுடன் கூத்தடிப்பதை சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் கதாநாயகி 25 வயது வரை கூட கதாநாயகியாக நீடிக்க முடியாது. 40 வயது கதாநாயகியை 20 வயது இளைஞனுடன் கூத்தடிக்கவிட்டால் பெண்களே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈர்ப்பு சமாச்சாரம்தான் இதற்கு காரணம். இதுதான் யதார்த்தம். இதுதான் பகுத்தறிவு.

பெரியார் வயதுடைய பெண்ணை வீரமணி திருமணம் செய்ய மாட்டார். வீரமணி வயதுடைய பெண்ணை பெரியார் வயதுடைய ஆண் திரமணம் செய்வார் என்பதுதான் எதார்த்தமான நிலை. இதை விவரித்துச் சொன்னால் தொடர் ஆபாசமாகிவிடும்.

பெண்களின் உடர்கூற்றைக் கவனித்து அவர்களின் பாதுகாப்பைக் கருதி அவர்கள் விஷயமாக முடிவு எடுப்பதாக இருந்தால் எத்தகைய முடிவை எடுக்க வேண்டும்?

பெண்களின் ஈர்ப்புத் தன்மை குறைந்து அவர்களுக்கு ஆண் துணை கிடைக்காத நிலை ஏற்படாமல் சமூகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இணையும் அவர்கள் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விலகி விடாமல் குறிப்பாக ஆண்கள் சகித்தக் கொண்டு போகவேண்டும். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விலகி விட்டால் சமுதாயம் நம்மைப் புறக்கணிக்கும். யாரும் பெண் தர மாட்டார்கள் என்ற அச்சம் ஆண்களுக்கு இருக்கவேண்டும். இது இருக்கும் வரை தான் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லற சகமும் கிடைக்கும்.

பெண்கள் மீது அக்கறை உள்ள யாரும், பகுத்தறிவு சிறிதளவாவது உள்ள யாரும் இப்படித்தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் பெரியார் என்ன சொல்கிறார் தெரியுமா? திருமணம் செய்வதற்கு முன் பத்து மாதங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழணுமாம்! அதன் மூலம் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளணுமாம்! பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமாம். இப்படி உளறுகிறார் பெரியார்.

நான் 1932 இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை , ' Proposed Husband and Wife ' என்கிறார்கள். ' அப்படி என்றால் என்ன அர்த்தம் ?' என்று கேட்டேன். ' நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம் ' என்றார்கள். ' எவ்வளவு காலமாக ? ' என்று கேட்டேன். ' எட்டு மாதமாக ' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் ? அந்த நாடு முன்னேறுமா ? ' பதிவிரதம் ' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா ? (பெரியார் ஈ.வே.ரா அவர்கள் விடுதலை நாளேட்டில் 28.6.1973 அன்று எழுதிய கட்டுரை)

பத்து மாதங்கள் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவிட்டு பிடிக்கவில்லை என்று விலகிக் கொண்டால் அந்த ஆணுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெண்ணுக்கு பாதிப்பு இல்லையா?

இந்த பத்து மாத காலத்தில் அவள் குழந்தை பெற்று இருந்தால் அதன் நிலை என்ன? என்றெல்லாம் பெரியாரின் மூளைக்கு எட்டவில்லை. எவனாவது எதையாவது புதிதாகச் சொன்னால் அதைத் தூக்கிப் பிடிப்பது என்ற அளவுக்கத்தான் பெரியாரின் மூளை வேலை செய்துள்ளது. அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஆய்வு வெய்யும் அளவுக்குப் பரந்ததாக அவரது அறிவு இருக்கவில்லை.

பெரியாரை விட்டு விடுபோம். பெரியாரை பகுத்தறிவுத் தந்தை எனக் கொண்டாடுவோர், உண்மையிலேயே அவ்வாறு நம்பினால் இதன்படி வாழ்வதற்கு முன் வருவார்களா?

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு மகளோ சகோதரியோ இருந்தால் 'நீ பத்து மாதம் எவனுடனாவது உடல் சுகம் அனுபவித்துப் பார்த்துவிட்டு அதன் பின்னர் உனக்குப் பிடித்திருந்தால் மணந்து கொள்' என்று கூறத் தயாரா?

நம்மை வம்புக்கு இழுத்த உண்மை ஏட்டின் எழுத்தாளர் தனது மகளுக்கு இந்த நிலையைப் பரிந்துரை செய்யத் தயார் இல்லை என்றால் பெரியாரின் மேற்சொன்ன தத்துவம் உளறல் என்று தன்னையறியாமலேயெ அவர் ஒப்புக் கொள்கிறார்.

பெண்களின் நலன் பற்றியும், உடல் கூறு பற்றியும் அறிவு இல்லாதவர்கள் மட்டுமே இது போன்ற கருத்தைக் கூற முடியும்.

3 comments:

Anonymous said...

Very interesting and acute observations from Periyaar. I must thank you for the privilege of accessing the message.

But your understanding of his thoughts is so personal.

You write:

பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பெயராலும் பணக்காரர்களாக ஆனவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். தங்களது திறைமையாலும், நேர்மையாலும், கடின உழைப்பாலும், வாரிசு முறையிலும் செல்வத்தைப் பெற்றவர்கள்தான் அதிகமாக உள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது ஊர்களில் பணம் படைத்தவர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.

சூழ்ச்சி செய்யத் தெரியாத எத்தனையோ வெகுளிகளிடம் செல்வம் சேர்வதை நாம் காண்கிறோம்.

This is not correct. Generally, in life, esp. in India, it is not possible to become rich without resorting to unfair means. Doctors, engineers, businessman, even teachers, even anmiikka saamiyaars - all become rich only by hook or crook.

If a shopkeeper opens a shop thinking of earning his living by fair means, he will soon go bankrupt.

Your observation of life's bitter realities are immature.

Periyaar has acute observations. No one is good nowadays.

Tamil says, 'pozhakkaith theriyaathavan'. It includes every meaning which you are here trying to hide.

இதற்கு மாற்றமாக எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது மடமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.

உழைக்காமல் சோம்பியிருப்பவனுக்கும், உழைத்துப் பாடுபடுபவனுக்கும் பொதுச் சொத்து என்ற போலிவாதம் செய்து சமமாகப் பங்கிடுவது எந்த வகையிலும் பகுத்தறிவுக்கு உகந்ததாகாது.

He means by the word, public property, what we see in life: everything is creation of god: all good things of life. But the cunning and crooked corner all, leaving little to the innocent and appaavis. You have not understood his meaning.

திறமையும், ஆற்றலும், கடின உழைப்பும், சூட்சியும், சூதுவாதும் நிறைந்த ஒருவன் ஒரு கடையை நடத்துகிறான். இவை ஏதும் இல்லாத ஒரு அப்பாவி ஒருவனும் அதேபோன்ற கடையை நடத்துகிறான்.

திறமைசாலியைவிட அப்பாவியின் கடையில் நல்ல முறையில் வியாபாரம் நடந்து அவனது செல்வம் பெருகுவதையும், தியமைசாலி நொடிந்து போவதையும் பரவலாக நாம் காணலாம். இந்த உண்மைகளை எல்லாம் பெரியார் கண்டு கொள்ளவில்லை.


Poor understanding. No businessman follows business ethics. Impossible. Why not you open a shop and then, you will understand everything.

You are imagining a lot. Periyaar writes from his experiences and you, from your imagination. Thats all.l

Anonymous said...

Now I post my general observations on periyaar’s article.

I agree with his thought on charity.

Poverty is created in the world by men. Not by God. God has created everything in life; but the cunning among us appropriate everything by hook or crook. They don’t bat an eyelid to cheat the masses. They go to any level to get rich: smuggling, bootlegging (kallacharaayam); girl-running (vibachaaram), hired killing of business rivals, graft and bribery in govt offices, selling spurious drugs and killing people, kidney stealing, cheating people of their hard earned money in the name of God etc. All this is the creation of man; and, by which the rich become richer walking on the empty stomach of the poor.

Periyaar’s view is that the rich become rich, richer and richest only by using the poor. To use the poor, you must first create the poor. If everyone gets everything in life, it will mean the God’s creation is evenly distributed among the people and there will be no rich and poor. The rich don’t like such an egalitarian society. They want the poor so that they can exploit them and become rich. Therefore, create the poor first.

There are many ways to create the poor. One of the ways is to use the name of the God.

Say to the poor:

“If in this world you don’t get your due, you will definitely get it in the other world. “
“ The meek shall inherit the Heaven” – Jesus said.

Your religion glorifies poverty. Therefore, it is easy for you to get more and more poor on your side; because you tell them they will get everything in other world. Now Allah wants them to suffer in poverty!

It makes these people to accept their poor and miserable condition on this life as God-given. God likes poverty, they think and become smug.

According to periyaar, the calculations of the rich to create poverty in the world in order to exploit the poor, include, among many things, the charity route also.

Charity is compelled by all religions, including yours. When there are no poor, to who you will show your great kindness and charity? If there are no poor, how will you fulfil your religious duty of charity? You want to feel great and want to go to Allah, don’t you? For that, the way is: YOU CREATE POVERTY AND THE POOR first.

According to periyaar, such creation is a conspiracy of the rich society against people. If the religion like yours does it, then it is the conspiracy of the religions.

Excellent article. Great thoughts. Periyaar is a genius here, no doubt!

ABU NOORA said...

அன்பிற்கினிய அனானிமஸ் அவர்களே!

உங்களுக்கு நீங்களே ஆறுதல் படுத்திக்கொள்ளும் வேலையிது. அப்படியானால் நண்பரே! உங்கள் தலைவர் வீரமணியை பொது மேடையில் சந்திக்கச் சொல்லுங்கள்.

அபூ நூறா